ஆப்நகரம்

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்ல நூதன வழிபாடு!

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் வென்று உலக கோப்பையை வெல்ல, ஆறு அடி உயர மெகா அகர்பத்தியை ஏற்றி வைத்து பிரார்த்தனை!

Samayam Tamil 15 Jun 2019, 9:30 am
வேலூரில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் வென்று உலக கோப்பையை வெல்ல, ஆறு அடி உயர மெகா அகர்பத்தியை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் டிட்டர் லைன் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் அமைந்துள்ளது. இங்கு இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி வெல்லவேண்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சைக்கிள் பியூர் நிறுவனத்தின் சார்பில், ஆறு அடி உயரம் கொண்ட மெகா சைஸ் அகண்ட ஜோதி அகர்பத்தியை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஏற்றி வைத்து பிரார்த்தனையை துவங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு இந்தியா வெல்ல வேண்டுமென பிராத்தனை செய்தனை செய்தனர். தொடர்ந்து.

இதே போன்று இந்தியா முழுவதும் 100 இடங்களில் இந்திய அணியின் வெற்றிக்காக கூட்டுப்பிரார்த்தனைகள் நடைபெற்றது. தமிழகத்தில் தஞ்சாவூர், ஈரோடு, கோவை, வேலூர், காஞ்சிபுரம், திருச்சி ஆகிய 6 இடங்களில் ஆறடி உயரத்திற்கு அகண்ட அகர்பத்தியை ஏற்றி இந்திய அணியின் வெற்றிக்காக வழிபாடு நடத்தினர்.

இந்த அகர்பத்தி இரண்டு நாட்களுக்கு இம்மாவட்டம் முழுவதும் சுற்றி வலம் வரும். இதில் பொதுமக்கள் தங்களின் பிரார்த்தனைகளை பதிவு செய்யும் ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்