ஆப்நகரம்

Mahalakshmi Temple: தங்கத்தை பிரசாதமாக வழங்கும் மகாலட்சுமி கோயில் - எங்கிருக்கிறது தெரியுமா?

மத்திய ப்ரதேசம் ரத்லத்தில் அமைந்திருக்கும் மகாலட்சுமி கோயிலில் நெய் வேத்தியத்திற்கு பதிலாக தங்கம் பிரசாதமாகா வழங்கப்படுகிறது. அது எப்போது, யாருக்கு மட்டும் வழங்கப்படும் என்பதை பார்ப்போம். Mahalaxmi Temple

Samayam Tamil 12 Nov 2020, 12:05 pm
நாம் பல கோயில்களுக்குச் சென்று வந்திருப்போம். பெருமாள் கோயிலில் குங்குமம், துளசி, போன்ற பிரசாதங்களோடு, ஏதேனும் ஒரு உணவு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.
Samayam Tamil Lakshmi gold
Mahalakshi Temple in Ratlam Madhya Pradesh


அதே போல் சிவன் கோயிலில் திருநீறு, அம்மன் சன்னதியில் குங்குமம், பல சமயங்களில் ஏதேனும் நெய் வேத்தியம் பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.

அதே போல் கோயில்களில் பல்வேறு வகை பிரசாதங்கள் வழங்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். ஆனால் இவற்றில் மிகவும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு கோயிலில் பிரசாதமாக தங்கம், வெள்ளி வழங்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?.

தங்கம் பிரசாதமாக வழங்கும் கோயில்:
மத்திய பிரதேசம் மாந்லத்டின் வட மேற்கு பகுதியில் இருக்கும் ரத்லா என அழைக்கப்படும் ரத்ன புரி நகரம். இங்குள்ள மகா லட்சுமி கோயில் தான் தங்கத்தைப் பிரசாதமாக வழங்கும் சிறப்பு வாய்ந்த ஆலயம் ஆகும்.

உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையச் செய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

நேர்த்திக் கடன்:
இந்த கோயிலுக்கு வந்து மகாலட்சுமி தேவியை வழிபட்டு செல்லும் பக்தர்கள், தங்களின் கோரிக்கை நிறைவேறினால், நேர்த்திக்கடனாகப் பணம் அல்லது பொருளுக்கு பதிலாக தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக வழங்குகின்றனர்.

இப்படி பக்தர்கள் வழங்கும் தங்கம் மற்றும் வெள்ளி மலை போல் கோயிலில் குவிந்து கிடக்கிறது.

தங்கம், வெள்ளி பிரசாதம்:
ஆண்டு முழுவதும் காண்க்கையாக சேரும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை அனைத்து கோயில்களிலும் கோயில் திருப்பணிக்காக பயன்படுத்துவது வழக்கம்.

மகா லட்சுமி எப்படி தோன்றினார், விஷ்ணு பகவான் எப்படி கரம்பிடித்தார் தெரியுமா? - புராண கதை இதோ

ஆனால் இந்த கோயிலில் ஆண்டு தோறும் தீபாவளி தினத்தன்று இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதகமாக வழங்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த கோயிலில் தரப்படும் இந்த பிரசாதத்தை யாரும் விற்பனை செய்வது இல்லை. அது இறைவனால் வழங்கப்பட்டதாக நினைத்து வைத்து பூஜிக்கின்றனர்.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தீபாவளி தினத்தில் இந்த கோயிலுக்கு தரிசிக்க செல்லும் பக்தர்களில் திருமணம் ஆன பெண்களுக்கு இந்த தங்கம், வெள்ளி பிரசாதம் வழங்கப்படுகின்றது.

வரலட்சுமி விரதத்தின் பயன்கள் என்ன மற்றும் யார் விரதம் இருக்க வேண்டும்?

ரூ. 100 கோடி அலங்காரம்:
தீபாவளி தினத்தில் இந்த திருக்கோயில் சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கமாக இருக்கின்றது.

நோக்கம் என்ன?ஏழை,எளியோரின் வறுமையை போக்கும் விதமாக இந்த கோயிலில் தங்கம், வெள்ளி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இருப்பினும் இங்கு வழங்கப்படும் தங்கத்தை விற்பனை செய்யாமல் அதை அதிர்ஷ்டமாக பலரும் பாவிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்