ஆப்நகரம்

மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு !

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Dec 2018, 4:41 pm
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil cats


அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து சபரிமலை சர்ச்சைக்குறிய இடமாக மாறியுள்ளது. ஐயப்பனை காண பெண்கள் முயற்சிப்பதும், அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது. கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்றப்போதிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்கள் பலர் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்இந்த ஆண்டின் மண்டல பூஜை இன்று இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ளது. மண்டல பூஜைக்கு பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்