ஆப்நகரம்

குலசேகரபட்டினம் தசரா திருவிழா 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குலசேகரபட்டினம் தசரா திருவிழா வரும் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

Samayam Tamil 1 Oct 2018, 12:49 pm
உலக பிரசித்த பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா வரும் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Samayam Tamil குலசேகரபட்டினம் தசரா திருவிழா 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!
குலசேகரபட்டினம் தசரா திருவிழா 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!


தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுவார்கள்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா வரும், 10ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல திருக்கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 19-ஆம் தேதி இரவில் நடக்கிறது.

இதையொட்டி குலசேகரன்பட்டினத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்