ஆப்நகரம்

கோலாகலமாக நடைபெற்று முடிந்த திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம்!!!

திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெற்று முடிந்தது.

Samayam Tamil 13 Nov 2018, 11:24 pm
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
Samayam Tamil திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம்!!!
திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம்!!!


முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும், கந்தசஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விழாவின் இறுதி நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது.

திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம்!!!

திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம்!!!

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் காண தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

முன்னதாக, சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு சுமார் 3,200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்