மதுரை மீனாட்சியம்மன் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் களில் கடந்த பத்து வருடங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தலைமை தணிக்கை அதிகாரி கொடுத்த அறிக்கையின் படி என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்பது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் வரும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
சென்னை திருதொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில் "தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக தற்போது உள்ள செல்வி.ரோஜாலிசுமதா, பரமக்குடி உதவி ஆணையராக இருந்த போது கூடுதல் பொறுப்பாக இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில்களில் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
முதன்மை பணியிடமான பரமக்குடி உதவி ஆணையர் பொறுப்பில் இருந்து கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் விடுவிக்கப்பட்ட பிறகும் இதர செயல் அலுவலர் பணியிடங்களை ஒப்படைக்காமல் தன்னிச்சையாக பணி தொடந்தார். அறநிலையத்துறை உயர் அலுவலர்களின் உடந்தையோடு திருக்கோயில்களின் நிதியினை முறைகேடாக பல லட்சம் செலவு செய்து ஆதாயமடைந்துள்ளார் .
இதற்கு தணிக்கைப் பிரிவின் அலுவலர்கள் இவருக்கு ஆதரவாக கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர் . இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே முறைகெடுகள் ஈடுபட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சமந்தபட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துறை செய்துள்ளதாக கூற பட்டது இதை தொடர்ந்து நீதிபதிகள் இந்து அறநிலைய துறையில் இது போன்று முறைகேடுகள் நடந்து வருகிறது.
இது குறித்து இந்து அறநிலையத்துறை தலைமை தணிக்கை அதிகாரி அளித்துள்ள புகாரின் அடிப்பையில் என்ன நடவடிக்கைகள் எடுக்க பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழகத்தில் மிக பெரிய கோவில்களான மதுரை மீனாட்சியம்மன் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில்களில் கடந்த பத்து வருடங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தலைமை தணிக்கை அதிகாரி கொடுத்த அறிக்கையின் படி என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்பது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் வரும் ஏப்ரல் 22 தேதிக்குல் பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்த விசாரணை ஏப்ரல் 22 க்கு ஒத்திவைத்தனர்.
சென்னை திருதொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில் "தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக தற்போது உள்ள செல்வி.ரோஜாலிசுமதா, பரமக்குடி உதவி ஆணையராக இருந்த போது கூடுதல் பொறுப்பாக இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில்களில் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
முதன்மை பணியிடமான பரமக்குடி உதவி ஆணையர் பொறுப்பில் இருந்து கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் விடுவிக்கப்பட்ட பிறகும் இதர செயல் அலுவலர் பணியிடங்களை ஒப்படைக்காமல் தன்னிச்சையாக பணி தொடந்தார். அறநிலையத்துறை உயர் அலுவலர்களின் உடந்தையோடு திருக்கோயில்களின் நிதியினை முறைகேடாக பல லட்சம் செலவு செய்து ஆதாயமடைந்துள்ளார் .
இதற்கு தணிக்கைப் பிரிவின் அலுவலர்கள் இவருக்கு ஆதரவாக கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர் . இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே முறைகெடுகள் ஈடுபட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சமந்தபட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துறை செய்துள்ளதாக கூற பட்டது இதை தொடர்ந்து நீதிபதிகள் இந்து அறநிலைய துறையில் இது போன்று முறைகேடுகள் நடந்து வருகிறது.
இது குறித்து இந்து அறநிலையத்துறை தலைமை தணிக்கை அதிகாரி அளித்துள்ள புகாரின் அடிப்பையில் என்ன நடவடிக்கைகள் எடுக்க பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழகத்தில் மிக பெரிய கோவில்களான மதுரை மீனாட்சியம்மன் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில்களில் கடந்த பத்து வருடங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தலைமை தணிக்கை அதிகாரி கொடுத்த அறிக்கையின் படி என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்பது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் வரும் ஏப்ரல் 22 தேதிக்குல் பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்த விசாரணை ஏப்ரல் 22 க்கு ஒத்திவைத்தனர்.