ஆப்நகரம்

Corona Effect: மூடப்படும் கோயில்கள் -திருப்பதி,மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட தமிழக கோயில்கள் விபரம்

கொரோனா பாதிப்பு காரணமாக நாடே சுகாதார பிரச்னையில் சிக்கியுள்ளது. முடிந்த வரை வீட்டிலேயே இருப்பதுதான் இதிலிருந்து தப்பட்க்கூடிய இன்றைய நிலையாக உள்ளதால், திருப்பதி, மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பெரிய கோயில்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Mar 2020, 8:32 pm
கொரோனோ வைரஸ் பாதிப்பு உலகையே ஆட்டிப்படைத்து வருகின்றது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சளி, இருமல் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு வர வேண்டாம் என ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் வைத்திருந்தது.
Samayam Tamil Meenakshi Amman Temple



தொடர்ந்து வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டினர் திருப்பதி கோயிலுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் வருவதைத் தடுக்கும் விதத்தில் அனைத்து கட்டண மற்றும் இணைய வாயிலாக முன்பதிவு செய்யப்படும் வசதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து வரும் மே மாதம் வரை 300 ரூபாய் கட்டண தரிசனம், சேவைகள், தங்கும் அறைகள் முன்பதிவு என அனைத்தையும் தேவஸ்தானம் நிறுத்தியுள்ளது.


அதோடு தற்போது திருப்பதியில் உள்ள பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், மேற்கொண்டு புதிதாக பக்தர்கள் வராத வண்ணம் மலை நடைபாதை மூடப்பட்டும், பேருந்து வசதிகள் நிறுத்தப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கீழ் திருப்பதி, அலமேலுமங்காபுரம் கோயில் உள்ளிட்ட கோயில்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக ஆந்திர அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் கூட்டமாக கூடுவதை தடுத்து கொரோனோ பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பழமையான இந்திய கோயில்களை தரிசனம்

தமிழக கோயில் மூடப்படும் விபரம்:
திருப்பதியைத் தொடர்ந்து தமிழகத்தில் மிக பிரபலமான கோயிகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழக கோயில் விபரம்:

மீனாட்சி அம்மன் திருக்கோயில் (Madurai Meenakshi temple)
திருச்செந்தூர் திருக்கோயில் (Tiruchendur temple )
ராமேஸ்வரம் திருக்கோயில் (Rameshwaram temple )
பழனி திருக்கோயில் (Palani temple )

ஸ்ரீரங்கம் திருக்கோயில் (Srirangam temple )
சமயபுரம் திருக்கோயில் (Samayapuram temple )
திருவாரூர் திருக்கோயில் (Thiruvarur temple )
சுசீந்திரம் திருக்கோயில் (Suchindram temple )

திருவண்ணாமலை திருக்கோயில் (Thiruvannamalai temple )
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் (Parthasarathy temple )
காஞ்சி திருக்கோயில் (Kanchi temple)

வடபழனி திருக்கோயில் (Vadapalani temple )
திருத்தணி திருக்கோயில் (Tirutani temple )
கபாலீஸ்வரர் ஆலயம் (Kapaleeshwar temple)


கொரோனோ வைரஸ் காற்றிலேயே 3 மணி நேரம் உயிர் வாழக்கூடிய திறன் இருப்பதால், பக்தர்கள் இதனால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அரசு கோயில்களை மூடி தடை செய்துள்ளது.

அதனால் பக்தர்கள் வெளியிடங்களுக்குச் செல்லாமல், வீட்டிலேயே பிரார்த்தனை செய்து, கொரோனோவை எதிர்த்து போராட விரும்பி கேட்டுக் கொள்கிறோம். அனைவரும் கூடுமானவரை நன்கு கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது நல்லது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்