ஆப்நகரம்

கார்த்திகை மாத சிறப்பு ஐயப்பன்,முருகன் பாடல்கள்!!!

பக்தர்கள் எல்லோரும் சபரிமலை ஐயப்பனுக்கும், பழநி மழை முருகனுக்கும் மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்கும் மாதம் கார்த்திகை.

Samayam Tamil 17 Nov 2018, 9:00 pm
கார்த்திகை மாதம் என்றாலே, பக்தர்கள் எல்லோரும் சபரிமலை ஐயப்பனுக்கும், பழநி மழை முருகனுக்கும் மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்கி விடுவார்கள்.
Samayam Tamil கார்த்திகை மாத சிறப்பு ஐயப்பன்,முருகன் பாடல்கள்!!!
கார்த்திகை மாத சிறப்பு ஐயப்பன்,முருகன் பாடல்கள்!!!


சுமார் 48 நாட்களுக்கு தொடரும் இந்த விரதத்தின் போது, அசைவ உணவுகளை சாப்பிடுவதை முற்றிலுமாக கைவிடுவார்கள். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி, பஜனை செய்வார்கள். அதேபோல், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி பஜனை செய்வார்கள்.

இப்படி செய்வதால், கடவுளின் அருள் நமக்குக் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பின்னர், ஐயப்பன் மலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்தவர்கள் சபரிமலைக்கும், முருகன் கோவிலுக்கு விரதம் இருந்தவர்கள் ஆறுபடை வீடுகளில் ஒன்றிற்கு பாதயாத்திரை சென்று, கடவுளை வணங்கி தங்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள். இந்த நாட்களில் பக்தர்கள் கேட்டு ரசிக்க, பக்தி பாடல்கள் இதோ.

அடுத்த செய்தி

டிரெண்டிங்