ஆப்நகரம்

நாக நாத சுவாமி திருக்கோயில் முழு விபரம்

நாக தோஷம் உள்ளவர்கள் நாகப்பட்டினம் நாகூர் நாகநாத திருக்கோயிலில் வந்து வணங்கினால் தோஷம் நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகின்றது.

Samayam Tamil 13 Sep 2019, 5:22 pm

நாக தோஷம் உள்ளவர்கள் நாகூர் நாகநாத திருக்கோயிலில் வந்து வணங்கினால் தோஷம் நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகின்றது.
Samayam Tamil Naganatha Swamy Temple


கோயில் விபரம்:

மூலவர் : நாகநாத சுவாமி
அம்மன் - நாகவல்லி அம்பாள்
உற்சவர் - சந்திரசேகரர் - கல்யாண சுந்தரர்
தல தீர்த்தம் - சந்திர தீர்த்தம்

தல விருட்சம் - பின்னை மரம்
பூஜை முறை - காமிய ஆகமம்
கோயிலின் புராண பெயர் - புன்னகாவனம்
இடம்: நாகூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு

கோயில் விழாக்கள் :
பிரதோஷம், கார்த்திகை வழிபாடு, மகா சிவராத்திரி, அர்த்த ஜாம பூஜை போன்ற திருவிழாக்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

மும்பை வலம்புரி சித்தி விநாயகர் கோயிலின் சிறப்புமிக்க அம்சங்கள்

தல சிறப்புகள் :

வைகாசி மாதம் பௌர்ணமி அன்று புன்னை மரத்தடியில் சுயம்பு லிங்கமாகத் தோன்றி பெருமாளுக்கு காட்சி கொடுத்தார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புற்ற தலம்.

தல பெருமைகள் ;
பிரம்மன், இந்திரன், சந்திர பகவான், சப்த ரிஷிகள், துருவாசர். உருத்திரசன்மன், அந்தணன் ஆகியோரால் வழிபடப்பட்ட சிறப்பு வாய்ந்த கோயில். நாகராஜனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை நாகநாத சுவாமி நீக்கியதால், இந்த திருக்கோயில் நாக தோஷ பரிகார தலமாக உள்ளது.

இந்த கோயிலில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, தான, தர்மங்களை செய்தால், சிவனின் பெருமையான கயாவில் செய்த பலன்கள் கிடைக்கும்.

இந்த கோயிலில் ஆனி மாத பெளர்ணமியில் சந்திரன் 10 நாட்களும், மாசி மாதம் பெளர்ணமியில் இந்திரன் 10 நாட்களும் கொடியேற்றி, தீர்த்தவாரி நடத்தி பிரமோற்சவம் செய்து வழிபட்டு சிவனடி சேர்ந்த சிறப்பு வாந்த தலம்.

அசுவினி நட்சத்திரத்தினர் வணங்க வேண்டிய பிறவி மருந்தீஸ்வரர் கோயில்

சம்புபத்தன் எனும் அந்தணனின் ஐந்து வயது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாம்புகளின் அரசனான நாகராஜன் தன் மனைவிகளுடன் கூடி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். அதை அந்த சிறுவன் பார்த்துவிட்டான்.

அதனால் நாகராஜன் சிறுவனை கடிக்க, அந்த சிறுவனும் மரணித்தான். இதனை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்து நாகராஜனுக்கு சாபம் கொடுத்தார் அந்த அந்தணன்.

நீ உன் நாகர் உலகை விட்டு பிரிந்து, அறிவும், வலிமையும் நீங்கி தனிமையில் பூலோகத்தில் கடவாய் என சபித்தார். உடனே தன் தவற்றை உணர்ந்த நாகராஜன் தன் சாபத்தை நீங்க வழி கேட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உன் தந்தை காசியபரைக் காண்டு வணங்கி, சாபம் தீர, மாசி மாத மகாசிவராத்திரியில் முதற்காலம் கும்பகோணம் நாக நாத சுவாமியையும், இரண்டாம் காலம் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், 3ம் காலம் நாகூரில் உள்ள நாகநாத சுவாமியை வழிபட்டு உன் சாபம் நீங்கி விமோசனம் பெற்று முக்தி அடைவாய் என்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு மற்றும் கோயிலின் சிறப்புகள்

நாகராஜன் பூஜித்ததால் சுவாமி நாகநாதர் என்றும், அம்பாள் திரு நாகவல்லி தாயார் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

கோயில் திறக்கும் நேரம் :
காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மதியம் 8.30 மணி வரை
முகவரி:அருள்மிகு நாகநாத திருக்கோயில், சிவன் சன்னதி, நாகூர், நாகப்பட்டினம் - 611 002.

அடுத்த செய்தி

டிரெண்டிங்