சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடன அஞ்சலி செலுத்தினர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி சம்பூர்ண இசைவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. விழாவின் கடைசி நாளான நேற்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள், ஒரே நேரத்தில் நடனமாடி நடராஜருக்கு நாட்டிய அஞ்சலி செலுத்தினர்.
இதில் வெளிநாடு, வெளிமாநில, மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி உள்ளூர் பரத கலைஞர்களும் கலந்து கொண்டு தங்கள் பரதநாட்டியத்தை ஆடல் அரசன் நடராஜர் முன்பு நடனம் ஆடி அஞ்சலி செலுத்தினர்.
வயது அடிப்படையில் 4 குழுக்களாக நடன கலைஞர்கள், ஒரே நேரத்தில் கீர்த்தனைகளுக்கு நடனமாடியது, கண்கொள்ளாக் காட்சியாக அமைந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி சம்பூர்ண இசைவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. விழாவின் கடைசி நாளான நேற்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள், ஒரே நேரத்தில் நடனமாடி நடராஜருக்கு நாட்டிய அஞ்சலி செலுத்தினர்.
இதில் வெளிநாடு, வெளிமாநில, மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி உள்ளூர் பரத கலைஞர்களும் கலந்து கொண்டு தங்கள் பரதநாட்டியத்தை ஆடல் அரசன் நடராஜர் முன்பு நடனம் ஆடி அஞ்சலி செலுத்தினர்.
வயது அடிப்படையில் 4 குழுக்களாக நடன கலைஞர்கள், ஒரே நேரத்தில் கீர்த்தனைகளுக்கு நடனமாடியது, கண்கொள்ளாக் காட்சியாக அமைந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.