ஆப்நகரம்

navaratri brahmotsavam: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று முதல் ஆரம்பம்

திருமலையில் 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்.

Samayam Tamil 10 Oct 2018, 9:27 am
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் 9 நாட்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சம் விழா நடைபெறவுள்ளது.
Samayam Tamil No-darshan-at-Tirumala-temple-for-five-days-in-August-
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சம் கோலாகல தொடக்கம்


மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திருப்பதி மலையில் ஒரே ஆண்டில் இரண்டு முறை வரும் பிரமோற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டில் 2 பிரம்மோற்சவங்கள் ஏற்பட்டுள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது.

நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில், பிரமோற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியான அங்குரார்ப்பணம் நேற்று மாலை திருப்பதி மலையில் நடைபெற்றது.

ஏழுமலையான் கோவிலில் பின்புறம் உள்ள வசந்த உற்சவ மண்டபத்திலிருந்து புற்று மண் எடுத்துவந்த கோயில் அர்ச்சகர்கள், அந்த மண்ணில் முளைப்பாரியிட்டனர்.

நவராத்திரி பிரம்மோற்சவத்தை காண அதிக அளவிலான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பக்தர்களின் தேவையை கருதி, அடிப்படை வசதிகளை செய்து தருவதில் தேவஸ்தான நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக திருப்பதி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்