ஆப்நகரம்

காரைக்குடியில் புதிய தேர் வெள்ளோட்டம்!- ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனர்!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மன் திருக்கோவிலுக்கு அழகிய சிற்ப வேலைகளோடு தேர் செய்யபட்டு இன்று வெள்ளோட்டம் நடைபெற்றது.

Samayam Tamil 10 May 2019, 6:40 pm
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மன் திருக்கோவிலுக்கு அழகிய சிற்ப வேலைகளோடு தேர் செய்யபட்டு இன்று வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் நீதியரசர் சொக்கலிங்கம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
Samayam Tamil car (1)


காரைக்குடி மையப்பகுதியல் வீற்று இருக்கும் அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மன் திருக்கோவிலுக்கு புதிய தேர் வெள்ளோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 100 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோயிலில், சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பிலான புதிய தேர் செய்யும் பணியினை முன்னாள் நீதியரசர் சொக்கலிங்கம் ஏற்றுக்கொண்டு அழகிய சிற்ப வேலைகளோடு தேர் செய்யும் பணி நிறைவு பெற்றது இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

காரைக்குடி மக்களை நலமுடம் வாழவைக்கும் கடவுளாக கொப்புடைய நாயகி அம்மன் அருள்பாலித்து வருகின்றார். முன்னாள் நீதியரசர் சொக்கலிங்கம் வடம் பிடித்து புதிய திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேர் கோயிலை சுற்றி உள்ள வீதிகள் வழியாக ஏராளமான பொதுமக்கள் வடம் பிடித்து ஓம் சக்தி கோஷத்துடன் இழுத்து வர, தேர் நிலையை அடைந்தது. பக்தா்கள் நேரத்திக்கடனாக தேர் சங்கரங்களில் தேங்காயை உடைத்து, அம்மனை வழிபட்டு சென்றனர். இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்