ஆப்நகரம்

தூத்துக்குடியில் 9 அடி சனீஸ்வர பகவான் சிலை!

திருமுருகன் பூண்டியில் வடிவமைக்கப்பட்ட, ஒன்பது அடி உயரமுள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிலை இன்று தூதத்துக்குடி பயணமாகிறது.

Samayam Tamil 26 Feb 2019, 6:20 pm
திருமுருகன் பூண்டியில் வடிவமைக்கப்பட்ட, ஒன்பது அடி உயரமுள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிலை இன்று தூதத்துக்குடி பயணமாகிறது.
Samayam Tamil images


திருப்பூர் மாவட்டம் , திருமுருகன் பூண்டியில் உள்ள திருமுருகன் பழனிவேல் சிற்பக்கலை கூடத்தில், ஒன்பது அடி உயரமுள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிலை, ஆறு மாதமாக உருவாக்கப்பட்டு வந்தது. தற்போது, சிலை பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் துாத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்பு உள்ள வீதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் சனீஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இது குறித்து, ஸ்தபதி குமாரவேல் கூறியதாவது:

“கோவிலில், தனி சன்னதியில் மூலவராக இந்த சிலை வைக்கப்பட உள்ளது. சுமார் நான்கு டன் எடை கொண்டது. ஒன்பது அடி உயரம் கொண்டது. ஸ்ரீ சனீஸ்வர பகவானின், வாகனமான காகம் மூன்று அடி உயரம் உள்ளது. வலது கைகளில், சூலம், அபயம் மற்றும் இடது கையில் வரதம், வில்அம்பு இடம் பெற்றுள்ளது. தோஷங்களை நீக்கும் சாந்தமான தோற்றத்துடன், பகவான் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பெரும் புண்ணியமாக கருதுகிறோம்’’

இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஒன்பது அடி உயரம் கொண்ட ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிலையை, பக்தர்கள் பலரும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்