ஆப்நகரம்

Temples in Madurai: மதுரையிலேயே உள்ள பஞ்சபூதத் தலங்கள் எங்கெங்கு உள்ளது தெரியுமா?

புண்ணியம் வேண்டி பஞ்சபூதத் தலங்களை தேடி அலைந்து பக்தர்கள் பலர் தரிசித்து வருகின்றனர். ஆனால் மதுரை மாவட்ட மக்கள் மிகவும் புண்ணியம் செய்த நகரம். இங்கு வாழும் மக்கள் அதை விட புண்ணியம் செய்தவர்கள். ஏனென்றால் பஞ்சபூதத் தலங்களை தேடி அலைந்து பக்தர்கள் பலர் தரிசித்து வருகின்றனர். ஆனால் மதுரை நகரிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளன.​

Samayam Tamil 31 Dec 2018, 12:03 pm
புண்ணியம் வேண்டி பஞ்சபூதத் தலங்களை தேடி அலைந்து பக்தர்கள் பலர் தரிசித்து வருகின்றனர்.
Samayam Tamil Aadhi-Chokkanadhar-temple


ஆனால் கோயில் நகர்மாம் மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அனைத்து கோயில்களையும் ஒருநாட்களில் தரிசிக்கும் வகையில் மிகவும் அருகருகாமையில் அமைந்துள்ளன.

பஞ்சபூதத் தலங்கள்:
1) நீர் ஸ்தலம் - மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில்
2) ஆகாய ஸ்தலம் - சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில்
3) நில ஸ்தலம் -இம்மையில் நன்மை தருவார் கோயில்
4) நெருப்பு ஸ்தலம் - தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில்
5) காற்று ஸ்தலம் - தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் ஆகியவை மதுரையிலேயே உள்ள பஞ்சபூத ஸ்தலங்கள் ஆகும்.

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும்
மதுரையில் வாழ்ந்தாலும்
மதுரையில் இறந்தாலும்
மதுரையில் வழிபட்டாலும்
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்