ஆப்நகரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா கோலாகலம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று நடைபெற்ற பங்குனி தேரோட்ட விழாவில் திரளானோர் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

Samayam Tamil 22 Mar 2019, 2:18 pm
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று நடைபெற்ற பங்குனி தேரோட்ட விழாவில் திரளானோர் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
Samayam Tamil ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா கோலாகலம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா கோலாகலம்!


08 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி தேர்விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு பங்குனி தேர்த்திருவிழா கடந்த மார்ச் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்ட விழாவை முன்னிட்டு தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார்.

அந்தவகையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன், அறங்காவலர் குழுவினர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நம்பெருமாளை வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து நாளை பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்