ஆப்நகரம்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

நாளை புரட்டாசி பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Sep 2018, 12:34 pm
நாளை புரட்டாசி பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Thiruvannamalai


வழக்கமாக பெளர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள் அதிகமாக இருப்பார்கள். இதில் புரட்டாசி பெளர்ணமி என்றால் இன்னும் அதிகமாக விசேஷம் இருக்கும்.
இந்நிலையில், நாளை புரட்டாசி பெளர்ணமி வருகிறது. அதன்படி, நாளை காலை 7.41 மணி முதல் மறுநாள் 8.42 மணி வரையில் பெளர்ணமி உள்ளது.

இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்த நேரம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 15 முதல் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், இயக்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பு கருதி கிரிவலத்தில் மலையேறவும் கற்பூரம் ஏற்றவும் தடைவிதிக்க்பட்டுள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்