ஆப்நகரம்

காரமடை அனுமந்தராயசாமி கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை!

காரமடை அனுமந்தராயசாமி கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

Samayam Tamil 24 Sep 2018, 3:43 pm
காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.
Samayam Tamil காரமடை அனுமந்தராயசாமி கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை!
காரமடை அனுமந்தராயசாமி கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை!


இக்கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜையையொட்டி அனுமந்தராயசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை முடிந்து திருமண் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த வழிபாட்டில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி,புஜங்னூர், வெள்ளியங்காடு மற்றும் தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களுக்கு ஸ்ரீஆஞ்சநேயா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்