ஆப்நகரம்

சபரிமலை நடைதிறப்பு: 144 தடை, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலை கோயிலில் நாளை நடைதிறக்கப்படுவதை ஒட்டி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 4 Nov 2018, 3:58 am
சபரிமலை கோயிலில் நாளை நடைதிறக்கப்படுவதை ஒட்டி, இன்று முதல் நாளை மறுநாள் வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, 5,000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil sabari mala 144


சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. பம்பை, நிலக்கல்மற்றும் சன்னிதானப் பகுதிகளில் பக்தர்கள் நின்று கொண்டு ,ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களை தடுத்து நிறுத்தினர். மேலும் ஏராளமான பெண் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் சித்திரை ஆட்ட விசேஷத்தை முன்னிட்டு நவம்பர் 5 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் நவம்பர் 6 இரவு 10.30 மணிவரை சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. மீண்டும் நடைதிறக்க இருப்பதால் சங் பரிவார் மற்றும் பல இந்து அமைப்புகள் மீண்டும் போரட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால்பம்பை , நிலக்கல் , இல்வுங்கல் மற்றும் சன்னிதானம் பகுதிகளில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சோதனைக்கு பிறகே பம்பை பகுதியில் நுழைய முடியும் என்று பத்தனம் திட்டா மாவட்ட காவல் அதிகாரி நாராயணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ‘சன்னிதானம், நிலக்கல், இலவுங்கல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது. இன்று இரவு முதல் 1,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர். சபரிமலை செல்லும் வழியில் யாரும் முகாமிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் . 2 ஐ.ஜி.க்கள், 5 எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் காவல்திறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்