ஆப்நகரம்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது

இன்று மாலை திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செவ்வாய்க் கிழமை இரவு 10.30 மணியளவில் மீண்டும் அடைக்கப்பட உள்ளது.

Samayam Tamil 5 Nov 2018, 6:31 pm
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சிறப்பு பூஜைக்காக இன்று மாலை திறக்கப்பட்டது. கோவிலை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil Sabarimala


சித்திரை ஆட்ட விசேஷத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை மையமாக கொண்டு ஏற்கனவே ஐயப்பன் கோவில் பகுதியில் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன.


ஐப்பசி மாத பூஜையின் போது கோவிலுக்குள் செல்வதற்காக வந்த பெண்களை போராட்டக்காரா்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு தடியடி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன. இந்நிலையில் கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோவிலை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சன்னிதானம் பகுதியில் முதல் முறையாக பெண் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சிறப்பு பூஜைகள் முடிவுற்ற பின்னா் கோவில் நடை மீண்டும் செவ்வாக் கிழமை இரவு 10.30 மணியளவில் சாத்தப்பட உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்