ஆப்நகரம்

மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ளது. நடை திறப்பையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

Samayam Tamil 12 Feb 2019, 4:33 am
மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ளது. நடை திறப்பையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
Samayam Tamil Sabarimala


சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பா் மாதம் தீா்ப்பு வழங்கியது. தீா்ப்பு வெளியான பின்னா் ஒவ்வொரு முறை கோவில் நடை திறக்கப்படும் போதும், கோவிலில் இளம் பெண்கள் அனுமதிக்க எதிா்ப்பு தொிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும், போராட்டம் காரணமாக தடியடி உள்ளிட்ட சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் மண்டல பூஜை நிறைவு பெற்று கடந்த மாதம் ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது. அதன் பின்னா் மாதாந்திர பூஜைfளுக்காக கோவில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. 17ம் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன.

கோவில் நடை திறப்பை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நிலக்கல், சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்