ஆப்நகரம்

அத்தி வரதர் ஏன் கல்லுக்கு பதில் மரத்தால் செய்யப்பட்டார்?- அறிவியல் மற்றும் ஆன்மிக உண்மை இதோ!

அத்தி வரதர் சிலை ஏன் மரத்தால் செய்யப்பட்டது என வைஷ்ணவ அதிகாரி பேராசிரியர் திரு வேங்கட கிருஷ்ணன் விளக்கியுள்ளார்.

Samayam Tamil 16 Jul 2019, 4:33 pm

அத்தி வரதர் பெயரும், அதன் பின்னால் மறைந்து இருக்கும் விஷயங்களை வைஷ்ணவ அதிகாரி பேராசிரியர் திரு வேங்கட கிருஷ்ணன் விளக்கியுள்ளார்.
Samayam Tamil athi varadar a


வைணவத்தில் இரண்டு ஆகமங்கள் உண்டு. ஒன்று பாஞ்சராத்ரம் ஆகமம், வைகாச ஆகமம் என உண்டு. பாஞ்சராத்ரம் ஆகமத்தில் 4 மூர்த்திகளும், வைகாச ஆகமம் 5 மூர்த்திகளும் கணக்கில் கொள்ளப்படும்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பாஞ்சராத்ரம ஆகம விதியை பின்பற்றும் கோயில்.
இரண்டு ஆகமங்களிலும் பெரிய வேறுபாடு இல்லை. கோயிலில் பூஜை எந்த ஆகம முறைகளின் படி நடக்கிறது என்பதை பொருத்து தான் கூறப்படுகிறது.

பாஞ்சராத்ரம் ஆகமத்தை பின்பற்றுபவர்கள், வைகாச ஆகமம் கோயிலில் சென்று பூஜை செய்ய முடியாது. அதே போல் வைகாச ஆகமத்தை பின்பற்றுபவர்கள், பாஞ்சராத்ரம் ஆகமம் கோயிலில் சென்று பூஜை செய்ய முடியாது.

அத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்?- டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

உதாரணம்:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருப்பதி கோயில் வைகாச ஆகமம். ஆனால் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள் பஞ்சராத்ரம் ஆகமத்தைப் பின்பற்றப்படுகின்றன.

அத்தி வரதர் எப்படி பெயர் வந்தது?
காஞ்சி என்ற சொல்லுக்கு இடையில் அணிந்து கொள்ளப்படும் மேகலை என்ற அணிகலன் அணியப்படுவதாலும், தமிழகாத்திற்கு இடை போன்று அமைந்த இடத்தை காஞ்சிபுரம் என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அத்திவரதரைப் போல் அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்திபவள வண்ணப் பெருமாள்!- கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள்
அதே சமயம் வரதராஜ பெருமாளை கஜேந்திரனால் ஆராதிக்கப்பட்டதால் ஹஸ்தி கிரி என அழைக்கப்பட்டது. அதுவே தமிழில் ஹஸ்தி கிரி, அத்தி கிரியானது என கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் அத்தி மரங்கள் சூழ்ந்து இருந்ததால் அத்தியூர் என அழைக்கப்பட்டது. இங்கு எழுந்தருளிய பெருமாளை அத்தி வரதர் என அழைக்கப்பட்டார்.

சிலைகள் செய்யப்படும் வகை:
கோயிலில் சிலை மூன்று வகைகளில் செய்யப்படுகிறது.

சிலை - கல்லால் செய்யப்பட்ட விக்ரகம் (திருப்பதி பெருமாள்)

சுதை - சுண்ணாம்பு, களிமண் உள்ளிட்டவை கலந்து செய்யப்பட்ட விக்ரகம். (ஸ்ரீரங்கம்)

தாரு - மரத்தால் செய்யப்பட்ட விக்ரகம். (அத்தி வரதர், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் திருக்கோவில்)

அத்தி வரதரை 12 ராசியினர் எப்படி வணங்க வேண்டும்?- என்ன வளம் பெறலாம்?

தாரு வடிவில் செய்யப்படும் கோயில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு மிகவும் குறைவு.
கல் மற்றும் சுதை வடிவில் செய்யப்படும் சிலைகளை விட தாரு எனப்படும் மரத்தால் செய்யப்படும் சிலைகள் சற்று பலவீனமாக இருப்பதால் தவறுதலாக ஏதேனும் ஒரு பொருள் அதன் மீது மோதினால் சேதம் அடையக் கூடிய சிக்கல் உண்டு.

அத்தி வரதர் -ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் புராண வரலாறு

இருப்பினும் ஆகம விதிப்படி அத்தி மரத்தில் தான் தாரு சிலை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஏனெனில் மற்ற மரங்களை விட வலிமையானது என்பதால் கூட இருக்கலாம் என பேராசிரியர் வேங்கட கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்