ஆப்நகரம்

தாமிரபரணி புஷ்கர விழா: 2வது நாளாக பக்தர்கள் புனித நீராடல்!

தாமிரபரணி புஷ்கர விழாவில் 2வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

Samayam Tamil 12 Oct 2018, 3:59 pm
தாமிரபரணி மகா புஷ்கர விழாவின், 2வது நாளான இன்று ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
Samayam Tamil maha-pushkaram-2018_SECVPF
தாமிரபரணி புஷ்கர விழா: 2வது நாளாக பக்தர்கள் புனித நீராடல்!


குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

அந்தவகையில், 144 ஆண்டுகளுக்கு பிறகு, தாமிரபரணி மகா புஷ்கர விழா, நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது.

இதனையடுத்து புஷ்கர விழாவின் இரண்டாவது நாளான இன்று காஞ்சி சங்கர மடம் சடகோப ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டார். இதையடுத்து, ஜீயர்கள், மடாதிபதிகள், ஆதினங்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி வழிப்பட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்