ஆப்நகரம்

புல்வாமா வீரர்களுக்கு சித்தி விநாயகர் கோயில் சார்பில் நிதி உதவி!

புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குத்தலில் உயிர்நீத்த மகாராஷ்டிர மாநில வீரர்களின் குடும்பங்களுக்கு பிரசித்த பெற்ற சித்தி விநாயகர் கோயில் நிர்வாகம் ரூ.51 லட்சம் நித உதவி அறிவித்துள்ளது.

Samayam Tamil 16 Feb 2019, 4:26 pm
புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு சித்தி விநாயகர் கோவில் நிதி உதவி அறிவித்துள்ளது.
Samayam Tamil pjimage-4-17


ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிர்நீத்த மகாராஷ்டிர மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் ராத்தோட் மற்றும் சஞ்சை ராஜ்புட் ஆகியோரின் குடும்பங்களுக்கு பிரசித்த பெற்ற சித்தி விநாயகர் கோயில் நிர்வாகம் ரூ.51 லட்சம் நித உதவி அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் ட்ரஸ்ட் இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

முன்னதாக அந்த மாநில அரசு சார்பில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் புல்வாமாவில் வீர மரணம் அடைந்த மகாராஷ்டிர மாநில வீரர்கள் இருக்கும் ரூ.50 லட்சம் நிதி உதவி அறிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தனர். இவர்களில் சுப்பிரமணியன் என்பவர் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்தவர். சிவ சந்திரன் என்பவர் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்தவர். இவர்களுடைய குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்குதவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்