ஆப்நகரம்

முருகனை வழிபட சிவபெருமானால் கூறப்பட்ட அதி சக்திவாய்ந்த மூலமந்திரம்!

சுவாமிமலை திருத்தலத்தில் முருகப் பெருமானிடம் பிரணவ மந்திர உபதேசம் பெற்றார் ஈசன்.முருகப் பெருமானிடம் பிரணவ மந்திர உபதேசம் பெற்றதால், அதி சக்தி வாய்ந்த ஒரு மூல மந்திரத்தை சிவபெருமான் முருகனை வழிபட உருவாக்கினர். அதன்படி தற்போதும் சுவாமிமலையில் மூலவரை அர்ச்சிக்கும்போது, 'நமோ குமாராய நம' என்று மந்திரம்தான் உச்சாடனம் செய்யப்படுகிறது.

Samayam Tamil 5 Jan 2019, 2:45 pm
ஒரு முறை 'பிருகு' மகரிஷி தீவிர தவத்தில் ஆழ்ந்தார். தனது தவத்துக்குத் தடை ஏற்படுத்துபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தம் சிறப்பை இழப்பார்கள் என்று ஆணையிட்டிருந்தார். அவரது தவ வலிமையால் அகில உலகமும் தகித்தது. தேவர்கள் அனைவரும் சிவனாரை வேண்ட... அவர் பிருகு முனிவரின் தலையில் கை வைத்து தகிப்பை கட்டுப்படுத்தினார். இதனால் தவம் கலைந்தது. முனிவரது ஆணைப்படி சிவனார் பிரணவ மந்திரத்தை மறந்தார்.
Samayam Tamil முருகனை வழிபட சிவபெருமானால் கூறப்பட்ட அதி சக்திவாய்ந்த மூலமந்திரம்!
முருகனை வழிபட சிவபெருமானால் கூறப்பட்ட அதி சக்திவாய்ந்த மூலமந்திரம்!


இதன் பிறகு, சுவாமிமலை திருத்தலத்தில் முருகப் பெருமானிடம் பிரணவ மந்திர உபதேசம் பெற்றார் ஈசன்.

தந்தைக்கு வலக் காதில் பிரணவப் பொருள் உப தேசித்த வேலவன், தன் தாயாகிய பராசக்தியும் அதன் அர்த்தத்தை அறிய வேண்டும் என்பதற்காக சிவனாரின் இடக் காதிலும் உபதேசம் செய்தார் என்கிறது புராணம்.

முருகனுக்கு மூல மந்திரம் பல இருப்பினும் பொதுவாக அனைவராலும் ஜெபிக்கப்படுவது "ஓம் சரவணபவ" தான்.

முருகப் பெருமானிடம் பிரணவ மந்திர உபதேசம் பெற்றதால், அதி சக்தி வாய்ந்த ஒரு மூல மந்திரத்தை சிவபெருமான் முருகனை வழிபட உருவாக்கினர்.

அது "ஓம் நமோ குமாராய நம" என்பதாகும்.

தற்போதும் சுவாமிமலையில் மூலவரை அர்ச்சிக்கும்போது, 'நமோ குமாராய நம' என்று மந்திரம்தான் உச்சாடனம் செய்யப்படுகிறது.

முருகப் பெருமானிடம் பிரணவ மந்திர உபதேசம் பெற்றதால் முருகனை குருவாக ஏற்றுக் கொண்ட சிவபெருமான், அதி சக்தி வாய்ந்த இந்த மூல மந்திரத்தை முதன் முதலில் ஓதி, முருகனை வழிபட்டார் என்பதை

"நாதாகுமரா நம' என்று அரனார்

ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்

வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா! குறமின் பதசேகரனே'

என்ற அருணகிரி நாதரது கந்தரனுபூதி பாடல், உறுதிபடுத்துகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்