ஆப்நகரம்

பூலாநந்தீஸ்வரர் ஆலயம்: உயரத்தில் மாறி மாறி காட்சி தரும் அதிசய சிவ லிங்கம்

பல சிவ தளங்கள் இருந்தாலும், தேனி சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் ஆலையத்தில் சிவனின் சிலை உங்கள் உயரத்திற்கு ஏற்ப மாறும் வகையில் அதிசயத்துடன் காட்சி அளித்து வருகின்றார்.

Samayam Tamil 27 Aug 2019, 5:03 pm

இந்தியாவில் கோயில்களுக்கு பஞ்சம் கிடையாது. தற்போது புதிதாக கட்டப்படும் கோயிலை தவிர, முன்னோர்களால் கட்டபட்ட ஒவ்வொரு பெரிய கோயிலும் பல புராண, வரலாற்று கதைகளை நினைவு படுத்தும் விதமாகக உள்ளன.
Samayam Tamil Chinnamanur Poolanandeeswarar Sivakami Amman Temple


நாம் பல கோயில்களில் சுவாமி தரிசனம் செய்திருப்போம். அப்போது நீங்கள் சுவாமி தரிசனம் செய்யும் போது சுவாமியின் சிலை உங்களை விட உயரம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது உணர்ந்திருப்பீர்கள்.

எப்படி பார்த்தாலும் ஒரே உயரத்தில் காட்சி தரும் சிவன்:
தேனி மாவட்டம் சின்னமனூர், பூலாநந்தீஸ்வரர் கோயிலின் மூலவர் எப்படி பார்த்தாலும் ஒரே உயரத்தில் காட்சி தரும் வகையில் சிவ பெருமான் காட்சி தருகின்றார்.

அதாவது நீங்கள் நின்று தரிசித்தாலும் சரி, அல்லது மூலவரின் முன் அமர்ந்து தரிசித்தாலும் உங்கள் உயரத்திற்கு ஏற்ப உயரம் மாறி தெரியும் அதிசயம் லிங்கமாக பூலாநந்தீஸ்வரர் காட்சி தருகின்றார்.

முன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி உள்ள சிவன் கோயில்!

வரம் தந்த ஈசன் :
பழங்காலத்தில் இந்த பகுதிக்கு ‘அள நாடு’ என அழைக்கப்பட்டது. இதன் தலைநகரமாக வீரபாண்டி இருந்தது. மன்னர் ராஜசிங்க பாண்டியன் ஆண்டு வந்தான். அவனின் அரண்மனையில் பணிசெய்த ஒருவர் தினமும் பாலுடன் இந்த காட்டு பகுதி வழியாக வருவது வழக்கம்.

ஆனால் சில நாட்களாக அந்த வழியாக வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூலா மரத்தின் வேர் தடுக்கி கீழே தள்ளிக் கொண்டிருந்தது. இந்த நிலை தொடரவே மன்னனிடம் இது குறித்து தெரிவித்தான்.


மன்னன் முகம் பதிந்த சிவலிங்கம் :
பணியாளரின் கூறியதை கேட்ட மன்னன் உடனே அந்த இடத்தை தோண்டிப் பாருங்கள் என உத்தரவிட்டார். அப்போது அங்கு தென்பட்ட ஒரு லிங்கத்திலிருந்து கிளம்பிய ஜோதி விண்ணுக்கும் மண்ணுக்கும் வரளரத் தொடங்கியது.

River Kaveri Story: காக்கையாக மாறி காவிரியை உருவாக்கிய கணபதி புராண கதை...

சிவ லிங்கத்தை தரிசித்த ராஜசிங்க பாண்டியன், ஈசனே தயவு செய்து என் உயரத்திற்கு ஏற்ற அளவுடன் நேரில் காட்சி தந்து அருளுங்கள் என வேண்டுக் கொண்டான்.

உடனே மன்னனின் அளவிற்கு மாறிய அந்த சிவ லிங்கத்தைப் பார்த்து வியந்து, ‘அளவுக்கு அளவானவரே’ என புகழ்ந்தார்.

மனனன் சுவாமியின் மார்பில் தன் முகம் பதிய கட்டி அணைத்து தன் நன்றியை தெரிவித்தார். அன்று முதல் மூலவருக்கு ‘பூலாநந்தீஸ்வரர்’ என பெயர் சூட்டப்பட்டது.
தற்போது கூட இந்த திருக்கோயிலில் உள்ள மூலவர் சிலையில் மன்னனின் முகம் பதிந்த நிலையில் இருப்பதை காண முடியும்.

இந்த திருக்கோயிலில் நடராஜர், சிவகாமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.



கதவுகள் மூடி மூடி திறக்கப்படும் திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில்!

கோயிலின் பெயர்:
அருள்மிகு சிவகாமி சமேத பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில், சின்னமனூர்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6:00 முதல் 11:00 மணி வரை
மாலை 4:00 முதல் 8:00 மணி வரை

விஷேசமான நாட்கள்:
சித்திரை பிரமோற்ஸவம்
பிரதோஷம்
மகா சிவராத்திரி
ஆவணியில் புட்டு திருவிழா
மார்கழியில் ஆருத்ரா தரிசனம்

எப்படி செல்லலாம்?
தேனியிலிருந்து 30 கிமீ தொலைவு மட்டுமே

அருகில் உள்ள தலம்
ராமகிருஷ்ண மடத்தின் பவதாரிணி திருக்கோயில்

அடுத்த செய்தி

டிரெண்டிங்