ஆப்நகரம்

ஸ்ரீசைலகிரீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரியக் கதிர்கள்!

சேலம் அருகே உள்ள ஸ்ரீசைலகிரீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் விழுவதை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்.

Samayam Tamil 6 Mar 2019, 12:00 pm
சேலம் அருகே உள்ள ஸ்ரீசைலகிரீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் விழுவதை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்.
Samayam Tamil ஸ்ரீசைலகிரீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரியக் கதிர்கள்!
ஸ்ரீசைலகிரீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரியக் கதிர்கள்!


சேலம் அருகே உள்ள திருமலைகிரியில் ஸ்ரீசைலகிரீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு மகா சிவராத்திரியான கடந்த 4ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று காலை சூரிய உதயத்தின் போது, சூரியக் கதிர்கள், கோயிலினுள் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து பிரகாசித்தன.

இதையடுத்து சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதனிடையே சிவலிங்கம் மீது சூரியக் கதிர்கள் விழுந்த சம்பவம் மளமளவென பரவியதை அடுத்து திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இந்த காட்சியை பார்த்து பக்தி பரவசமடைந்த பக்தர்கள், தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஸ்ரீசைலகிரீஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரு பிரிவினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இரு கோயில்களும் மூடி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து இரு பிரிவினரும் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.

இதனிடையே, அனைத்து பிரிவினரும், கோயிலில் வழிபடலாம் என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்ட பிறகு 4 ஆண்டுகளுக்கு பிறகு இரு கோயில்களும் சமீபத்தில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்