ஆப்நகரம்

Palaniswami: செம லக்கி- ஜெயலலிதாவிற்கு கிடைக்காத பெருமை எடப்பாடியாருக்கு... அதுவும் அத்திவரதர் மூலமா!

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதரின் வரலாற்றில், முதல்வர் பழனிசாமிக்கு இப்படியொரு பெருமை கிடைத்துள்ளது.

Samayam Tamil 18 Aug 2019, 12:25 pm
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 48 நாட்களாக நடைபெற்ற தரிசன நிகழ்வு நிறைவு பெற்றுள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அரிய அத்திவரதரை, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தரிசனம் செய்துள்ளனர்.
Samayam Tamil Athi Varadar


கடைசி நாளில் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து ஆகம விதிகளின் படி, நள்ளிரவில் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டது.

Also Read: அத்தி வரதர் மூலம் ரூ. 8 கோடி வருவாய் ஈட்டிய இந்து அறநிலைய துறை!

அங்குள்ள நீராழி மண்டபத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டார். அதன் அருகில் நாக சிலைகளும் வைக்கப்பட்டன. அடுத்த 40 ஆண்டுகள் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருப்பார்.

Also Read: அத்தி வரதர் குளத்தில் சேதமடையாமல் இருக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் எப்படி செய்யப்படுகிறது

இதையொட்டி சிலை பாதிக்கப்படாமல் இருக்க மூலிகைகள் கலந்த தைலக்காப்பு பூசப்பட்டது. இந்நிலையில் அத்திவரதர் வைபவம் நடைபெற்றதை குறிக்கும் வகையில், அனந்தசரஸ் குளத்தில் கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

Also Read: அத்திவரதரை தரிசித்த 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள்... உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

அதில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பெயரும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் அத்திவரதரின் வரலாற்றில் எடப்பாடி கே.பழனிசாமியும் ஒரு அங்கமாக இடம்பிடித்துள்ளார்.

அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்பட்ட உடன், ஐதீகப்படி மழை பெய்யும் என்பது நம்பிக்கை. அவ்வாறே காஞ்சிபுரத்தில் மழை பெய்து பக்தர்களை பரவசப்படுத்தியது. இனி வரும் 2059ஆம் ஆண்டு தான், அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை வெளியே வந்து, பக்தர்களுக்கு காட்சி தருவார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்