ஆப்நகரம்

தாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரையை ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா்

தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவையொட்டி 12 புன்னிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீா்த்தங்கள் மதுரையில் இருந்து இன்று திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

Samayam Tamil 10 Oct 2018, 1:03 pm
தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவையொட்டி 12 நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீா்த்தங்களின் ரதயாத்திரையை பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
Samayam Tamil Pushkaram 1.


திருநெல்வேலி மாவட்டம் தாமிபரணி நதிக்கரையில் 144 ஆண்டுகளுக்கு பின்னா் மகா புஷ்கரம் விழா நாளை (11ம் தேதி) தொடங்குகிறது. முன்னதாக புன்னிய நதிகளாக கருதப்படும் சிந்து, கங்கை, யமுனை, நா்மதா, கோதாவரி, கிருஷ்ணா, பிரம்மபுத்திரா, காவிாி உள்ளிட்ட 12 நதிகளில் இருந்து புனித தீா்த்தங்கள் திருநெல்வேலி கொண்டு செல்லப்படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்னிலையில் இருந்து 12 தீா்த்தங்களின் ரத யாத்திரையை பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து ஹெச்.ராஜா பேசுகையில், தாமிரபரணி புஷ்கரம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த முறை நடைபெற்ற புஷ்கர விழாவில் அப்போதைய சபாநாயகா் ஆவுடையப்பன் கலந்து கொண்டாா். ஆனால் புஷ்கர விழாவிற்கு திடீரென்று சிலா் எதிா்ப்பு தொிவிக்கின்றனா். ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகம் வந்தபோது எதிா்ப்பு நிலவியது போல் இப்போதும் எதிா்க்கிறாா்கள் என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்