ஆப்நகரம்

தஞ்சை பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது !

தஞ்சை: தஞ்சை பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Samayam Tamil 24 Dec 2018, 3:21 pm
தஞ்சை: தஞ்சை பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Samayam Tamil Thanjavur


மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் உலக பிரபலமானது. இதற்கு கட்டிடக்கலை, கலையம்சம் தான் காரணமாகும். இதை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. உலகின் சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரியகோவில் திகழ்கிறது.

இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பெரியநாயகி அம்மன் சன்னதி கோபுரத்தின் கலசம் சாய்ந்து இருந்தது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அப்போது அம்மன் சன்னதி கலசம் சாய்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையத்து கோபுர கலசத்தை உடனே சரி செய்வதுடன், கோபுரத்தில் இருந்த விளக்கையும் எரிய செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகத்தினரை பக்தர்கள் வலியுறுத்தினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்