ராகு, ஆதிஷேசன் உள்ளிட்ட பல பாம்பினங்கள், விநாயகர், முருகன், பார்வதி தேவி, லட்சுமி, சரஸ்வதி, பல ரிஷிகள் இத்தலத்தில் வந்து வழிபட்டு நிவாரணம் பெற்றுள்ளனர். இக்கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.
ராகு பரிகாரத் தலம்
ராகு பகவான் :
மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு பகவான். இவருக்கு சொந்த வீடு இல்லாததால் நின்ற இடத்தில் இருந்து தான் பார்க்கும் ராசிகளுக்கு பலவை தரக்கூடியவர். ராகு தி்சை என்பது 18 ஆண்டுகள் ஆகும். இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் தங்குவார். இவர் 12 ராசிகளை சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகின்றன.
ராகுவிற்கு உகந்த கிழமை, சனிக்கிழமை. இவருக்கு உரிய தானியம் உளுந்து. அதிகம் சம்பாதிக்கும் யோகம், வெளிநாட்டு தொடர்புகளால் உயர்ந்த நிலைக்கு செல்லுதல், உற்றார் உறவினர்களின் ஆதரவு, ஆடை ஆபரண சேர்க்கை , புதுமையான விஷயங்களில் ஆர்வம் போன்றவற்றிற்கு காரணமாக அமைபவர் ராகு பகவான் தான்.
உடல்நல பாதிப்பு, எதிர்பாராத விபத்து, கணவன் -மனைவி கருத்து வேறுபாடு, அறுவை சிகிச்ைச போன்ற மருத்துவ செலவுகள், பிள்ளைகளுக்கு தோஷம், அபராதம் கட்ட வேண்டிய நிலை, வயிறு தொடர்பான நோய்கள் ஆகியன ராகுவின் கெடு பலன்களால் ஏற்படுக் கூடிய விளைவுகளாகும்.
பழனி கும்பாபிஷேக விழா : எந்த நாளில் என்ன வைபவம்? முழு விபரம் இதோ
ராகு பரிகார தலங்கள் :
ராகு காயத்ரி மந்திரம் :
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்
கோவில் தனிச்சிறப்புக்கள் :
* ஆதிசேஷன் உள்ளிட்ட பாம்பினங்கள் வழிபட்ட தலம்
* பாலபிஷேகத்தின் போது ராகுவின் உடல் நீல நிறமாக மாறும்.
* கிரிஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் ஒரே இடத்தில் காட்சி தருகிறார்.
கோவில் பற்றிய விபரங்கள் :
தாயார் : பிறையணிநுதலாள், கிரிஜாம்பிகை
தல விருட்சம் : செண்பகம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள்
தல வரலாறு :
இப்பகுதி செண்பக மரங்கள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் செண்பகவனம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. ஆதிஷேசன், தக்ஷரா, கார்கோடகன் உள்ளிட்ட பல பாம்பினங்கள் வந்து இத்தலத்தில் லிங்க வடிவாக அமைந்திருந்த சிவ பெருமானை வழிபட்டதால் இத்தலம் திருநாகேஸ்வரம் என பெயர் பெற்றது.
பாம்புகளின் தலைவனான ஆதிஷேசன், இத்தலத்தில் தவம் செய்ததால் இத்தலத்திற்கு செண்பகாரண்ய ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. ஆதிஷேசனின் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு காட்சி கொடுத்த சிவ பெருமான் பல வரங்களை அளித்துள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. கிரிஜாம்பாள் இத்ததலத்தில் லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன், சாஸ்தா ஆகியோருடன் வந்து வழிபட்டதாக சொல்லப்படுகிறது.
அகலிகையிடம் தவறாக நடந்து கொண்ட இந்திரனுக்கு கெளதம மகரிஷி சாபம் அளித்தார். சாபம் பெற்ற இந்திரன் இத்தலத்திற்கு வந்து அம்பாளுக்கு 45 நாட்கள் புனுகு சாத்தி வழிபட்டு, சாப விமோசனம் பெற்றதாக தல புராணம் சொல்கிறது.
சனிக்கிழமையில் வரும் தை அமாவாசை : சனீஸ்வரரின் மனம் குளிர என்ன செய்ய வேண்டும் ?
தல சிறப்பு :
கோவில் அமைப்பு :
இக்கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். ஆதித்ய சோழனால் 10 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் ராகுவுக்கு தனி சன்னதி உள்ளது. நான்கு வாசல்களைக் கொண்ட இக்கோவிலில் ஐந்து நிலை கோபுரங்கள் உள்ளன. பல சன்னதிகள் இருந்தாலும் நாகநாத சுவாமி, கிரிஜாம்பாள், ராகு ஆகியோர்களே பிரதான தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள். இங்கு அம்பாள் தவக்கோலத்தில் காட்சி தருவதாக ஐதீகம். இத்தல தீர்த்தம் சுல தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. குளத்திற்கு அருகே நூறு கால் மண்டபம் உள்ளது. இக்கோவில் உள்ள பல மண்டபங்கள் நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
எந்த கோவிலுக்கு போனால் சொந்த வீடு வாங்கலாம்?
திருவிழாக்கள் :
அதிசயம் :
இத்தலத்தில் ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் நடைபெறும் போது ராகுவின் மேனி நீல நிறமாக மாறும் அதிசயம் நடக்கிறது. பொதுவாக ராகு மனித தலை, பாம்பு உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் மனித உருவில் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை :
அமைவிடம் :
பெருமாளின் திவ்ய தேச தலங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோவிலுக்கு மிக அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 6 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
கோவில் திறந்திருக்கும் நேரம் :
முகவரி :
அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில்,
திருநாகேஸ்வரம் - 612 204,
தஞ்சாவூர் மாவட்டம்
தொலைப்பேசி : + 91 - 435 - 236 3354, 94434 - 89839