ஆப்நகரம்

திருவாவடுதுறை ஆதீனத்தில் இளவரசரை நியமித்த மதுரை ஆதீனம்!

திருவாவடுதுறை ஆதீனத்தில் மூத்த தம்பிரானாக கடந்த 45 வருடங்களாக சிவத்தொண்டு புரிந்து வந்த ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை இளவரசராகப் பட்டம் சூட்டி நியமனம்.

Samayam Tamil 8 Jun 2019, 1:23 pm
திருவாவடுதுறை ஆதீனத்தில் மூத்த தம்பிரானாக கடந்த 45 வருடங்களாக சிவத்தொண்டு புரிந்து வந்த ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை, மதுரை ஆதீனம் 292-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனத்தின் இளவரசராகப் பட்டம் சூட்டி நியமனம் செய்துள்ளார்.
Samayam Tamil Thiruvaduthurai Adheenam


இன்று(07.06.2019) மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், மதுரை ஆதீனம் 292-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீன மரபுகளின்படி, தமது திருக்கரங்களால் ஆச்சார்ய அபிசேகம், மந்திரக் கசாயம், நிர்வாண தீட்சை, ஆறுகட்டி சுந்தரவேடம் போன்ற அனைத்து சம்பிரதாய சடங்குகளையும் செய்து, ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை மதுரை ஆதீனத்தின் இளவரசராக நியமனம் செய்துள்ளார்.



மேலும், மதுரை ஆதீன இளவரசருக்கு, "ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்" என்ற திருநாமத்தை சூட்டியருளினார். இவ்விழாவில் மதுரை ஆதீனத் திருமடத்தின் நிர்வாகிகளும், திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்