ஆப்நகரம்

திருமந்திரம் 6வது பாடல்: அவன் அவள் அது கடந்து எதுவுமாகி நின்ற சிவனே

பன்னிரு திருமுறைகளில் 10வதாக விளங்குகிறது திருமூலர் எழுதிய திருமந்திரம். இதன் 6வது பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 25 Jun 2019, 1:34 pm
பன்னிரு திருமுறைகளில் 10வதாக விளங்குகிறது திருமூலர் எழுதிய திருமந்திரம் ஒரு மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது. திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். அன்பே சிவம் என கருத்தை வலியுறுத்தும் விதமாக திருமூலர் அருளியுள்ளார். திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
Samayam Tamil Thirumanthiram Songs


திருமந்திரம் 6

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்று இல்லை
அவனன்றி ஊர் புகுமாறு அறியேனே

பொழிப்புரை
அவன் அவள் அது கடந்து எதுவுமாகி நின்ற சிவனே
அவன் என்கிறார் மூலர்
அவனாகி சிவனை ஒழித்து விட்டால் அமரர் கூட்டம் இல்லை
வான் வெளியில் அமர்ந்திருக்கும் ஈசனை போல தொடர்ஜோதியாய் அமரரும் தேவரும் இல்லை
டேய் அந்த சிவனை இன்றி நீ செய்யும் எதுவும்
அகத்துவம் விளக்கும் தவமும் இல்லை சிவனை விட்டால் தவப்பயன் இல்லை
ஃ. என்ற மூன்று தேவர் ஆயுத எழுத்தாகியது
படைத்தல் காத்தல் அழித்தல்
சிவன் திருமால் பிரம்மம்
மூன்று தேவரின் நடுவே வீற்றிருக்கும் பரம்பொருள் இன்றி
மூச்சுடரால் எதுவும் ஆகாது
அந்த ஜோதீர்ஜோதி ஈசன் இன்றி பரலோக பரகதி
ஊரை அடைபவனும் இல்லை
பிறவிப் பயனும் இல்லை
இது தான் மூலத்தை உரைத்த மூலர் திருமூலர்

இப்படிக்கு
மதுரை சிவவாக்கியர்
சி.முருகேசன்
9003811270
cellphone9003811270@gmail.com

அடுத்த செய்தி

டிரெண்டிங்