ஆப்நகரம்

திருப்பதியில் வரும் 11ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்; பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்!

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது.

Samayam Tamil 8 Sep 2018, 3:39 pm
திருப்பதி: பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது.
Samayam Tamil Tirumala


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு வரும் 13ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

இதற்காக திருமஞ்சனம் எனும் சுத்தம் செய்யும் பணி, வரும் 11ஆம் தேதி காலை 6.10க்கு தொடங்கி 11 மணி வரை நடைபெறுகிறது. அதாவது ஆனந்த நிலையத்தில் இருந்து மகாதுவாரம் வரை பணி நடைபெறும்.

மேலும் கோவில் பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 6.30 மணிக்கு அஷ்டதல பாதபத்மாராதன சேவையும், விஐபி தரிசன டிக்கெட்களும் ரத்து செய்யப்படுகிறது.

இதனால் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது. பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, கோவில் கதவுகள் திறக்கப்பட்டு, 12 மணியளவில் நைவேத்தியம் நடக்கிறது. பின்னர் 1 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

Tirupati Alwar Thirumanjanam will be conducted on 11th.

அடுத்த செய்தி

டிரெண்டிங்