ஆப்நகரம்

திருப்பதியில் 10 ஆம் தேதி தொடங்கிறது நவராத்திரி பிரம்மோற்சவ விழா!

திருப்பதியில் 10 ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கி, 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

Samayam Tamil 4 Oct 2018, 5:25 pm
அக்டோபர் மாதம் 10ம் தேதிதொடங்கி 18ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலைஇரண்டு வேளைகளிலும் திருமலையின் நான்குமாட வீதிகளில் ஊர்வலம் வருகிறார்.
Samayam Tamil Tirumala-Brahmotsavams


திருப்பதி வெங்கடேசப்பெருமாள் கோயிலில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 13ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

அக்கோபர் 10 ஆம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் மலையப்ப சுவாமி காலை, மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலம் வருகிறார்.

பிரம்மோற்சவத்தில் பெருமளவில் பக்தர்கள் கலந்துகொள்வதால், எல்லாவகையான சிறப்பு தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்துசெய்துள்ளது.

பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் விவரம்:

10-10-2018 - இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா

11-10-2018 - காலை 9 மணிக்கு சிறிய சேஷ வாகன வீதி உலா,

இரவு 7 மணிக்கு ஹம்ச (அன்னப்பறவை) வாகன வீதி உலா

12-10-2018 - காலை 9 மணிக்கு சிம்ம வாகன வீதி உலா,

இரவு 7 மணிக்கு முத்துப் பந்தல் நிகழ்ச்சி

13-10-2018 - காலை 9 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதி உலா,

இரவு 9மணிக்கு சர்வ பூபால வாகன வீதி உலா

14-10-2018 - காலை 9 மணிக்குமோகினி அவதாரம் பல்லக்கு வாகன வீதி உலா, இரவு 7 மணிக்கு கருட சேவை

15-10-2018 காலை 9 மணிக்கு அனுமன் வாகன வீதி உலா, மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா,

16-10-2018காலை 9 மணிக்குசூர்ய பிரபை வாகன வீதி உலா, இரவு7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா

17-10-2018 காலை 7 மணிக்கு தேரோட்டம், இரவு7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா,

18-10-2018காலை 7 மணிக்கு சக்கர ஸ்நானம், இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்