ஆப்நகரம்

விஐபி தரிசனத்தில் மாற்றம் : திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை

திருப்பதிக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

Samayam Tamil 30 Nov 2018, 11:54 am
திருப்பதிக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
Samayam Tamil sakjbvlaj


ஆந்திர மாநிலம் திருப்பதி, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு அதிகாலை முதல் காலை 10 மணிவரை மூன்று விதங்களில் தேவஸ்தானம் தரிசம் வழங்கி வருகிறது. இந்த தசிசனம் நிறுவனங்களின் தலைவர்கள், முக்கிய புள்ளிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது. இவற்றை கவனிக்க, அவர்களுக்கென தனித்தனியாக மக்கள் தொடர்பு செயலர்கள் உள்ளனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் தினசரி தரிசனத்திற்காக, பரிந்துரை கடிதங்களும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், பரிந்துரை கடிதங்கள் வழங்குவது, தற்போது அதிகரித்துள்ளதால், சாதாரண பக்தர்களுக்கு காலையில், 10:00 மணிக்கு மேல் மட்டுமே, ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனையடுத்து திருமலைக்கு வரும் பிரமுகர்கள் மாத்திற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக அலோசனை நடைபெற்று வருகிறது,

அடுத்த செய்தி

டிரெண்டிங்