ஆப்நகரம்

மகாபுஷ்கரம் விழா இன்றுடன் நிறைவு!

தாமிரபரணி மகாபுஷ்கரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடியுள்ளனர்.

Samayam Tamil 22 Oct 2018, 10:34 am
தாமிரபரணி மகாபுஷ்கரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும்தமிழகம் மற்றும்அண்டை மாநிலங்களிலிருந்து 5லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடியுள்ளனர்.
Samayam Tamil 201803070835194200_maha-pushkaram-festival_SECVPF


144 ஆண்டுகளுக்குஒரு முறை நடப்பதாக கருதப்படும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. நெல்லை மாவட்டத்தின் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வரையிலான 143 படித்துறைகள்மற்றும் 64 தீர்த்தகட்டப் பகுதிகளில் புஷ்கரவிழா பூஜைகள்நாள் தோறும் நடைபெற்றது.

ஆயுத பூஜை, தசரா திருவிழா விடுமுறை தினங்களால், தமிழகம் மட்டுமில்லாமில், வெளிமாநில பக்தர்களும் தாமிரபரணி நோக்கி படையெடுத்தனர். நேற்றைய தினத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக அதிகாரிகள்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பக்தர்கள்குளித்துச் செல்ல வசதியாக தனித்தனி படித்துறைகள்அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் அவர்களின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கலை நிகழ்ச்சிகள்வேள்வி, ஆராட்டு நிகழ்ச்சி எனபல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிலையில், 12 நாட்கள் நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கரா விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இனி அடுத்த 144 வருடங்களுக்குப் பிறகு தான் வரும் என்று கூறப்படுகிறது. நிறைவு விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள், யாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்