ஆப்நகரம்

Makara Jyothi Time: சபரிமலையில் இன்று மகர ஜோதி: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

சபரிமலையில் இன்று மாலையில் மகர ஜோதி தரிசனம் நடைபெறுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்துள்ளனர்.

Samayam Tamil 14 Jan 2019, 5:19 pm
சபரிமலையில் இன்று மாலையில் மகர ஜோதி தரிசனம் நடைபெறுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்துள்ளனர்.
Samayam Tamil makara-jyothi-.1547321054


சபரிமலையில் இன்று பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி தெரியும். இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். இதனையடுத்து ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது.

இந்த பூஜையையொட்டி ஐயப்ப பக்தர்கள் சுமார் 18 லட்சம் பேர் இன்று சபரிமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு சபரிமலைக்கு வருகை தந்த பக்தர்கள் கூட்டத்தை ஒப்பிட்டு இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகரவிளக்கு பூஜையையொட்டி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் மாலை 6.20 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும். அவற்றை தந்திரி ராஜீவரு மற்றும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பெற்று கொள்கின்றனர்.

அந்த திருவாபரணங்களை சாமிக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்துவார்கள். அப்போது பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும். பு‌ஷ்பாபிஷேகத்தை தொடர்ந்து இரவு 7.52 மணிக்கு மகர சங்கரம சிறப்பு பூஜையும், அபிஷேகமும் நடைபெறுகிறது.

பாதுகாப்பு பணிக்கு பம்பை மற்றும் சன்னிதானத்தில் 5 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அவர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியை செய்து வருகிறார்கள்.
ஜோதி தரிசனம் முடிந்து சொந்த ஊருக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆயிரம் சிறப்பு பஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்