ஆப்நகரம்

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் திருக்கல்யாணம்

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சித்தி, புத்தி தேவியருடன் சுவாமிக்கு திருக்கல்யான உற்சவம் நேற்று நடைபெற்றது.

Samayam Tamil 12 Sep 2018, 6:02 pm
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்தவிநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் முக்கிய நிகழ்ச்சியானசித்தி, புத்தி தேவியருடன் சுவாமிக்கு திருக்கல்யான உற்சவம் நேற்று நடைபெற்றது.
Samayam Tamil hqdefault


திருவாடானை அருகேயுள்ள உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயில் உள்ளது.ராமாயண காலத்தில் சீதையை மீட்க ராமபிரான், இலங்கை செல்லும் முன்இக்கோயிலில் வணங்கிச் சென்றதாக புராண வரலாறு கூறுகிறது.பிரசித்தி பெற்ற இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா, செப்டம்பர் 4 ஆம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்துநாள்தோறும் இரவில் பல்லக்கு, கேடகம், குதிரை, யானை, மூஷகம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகப் பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்துபக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்தி, புத்தி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள்ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சித்தி, புத்தியருடன் திருக்கல்யாண நிகழ்ச்சி, இக்கோயிலில் மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்