ஆப்நகரம்

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் நாளை மறுநாள் சதுர்த்திப் பெருவிழா!

பிள்ளையார்பட்டியில் விநாயகர் கோவிலில் நாளை மறுநாள் 4ம் தேதி முதல் சதுர்த்திப் பெருவிழா துவங்குகிறது.

Samayam Tamil 2 Sep 2018, 2:18 pm
பிள்ளையார்பட்டியில் விநாயகர் கோவிலில் நாளை மறுநாள் 4ம் தேதி முதல் சதுர்த்திப் பெருவிழா துவங்குகிறது.
Samayam Tamil pillayar


ஒவ்வொரு வருடமும் பிள்ளையார்பட்டியில் பத்து நாட்கள் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா நடைபெறும். அந்தவகையில், இந்த வருடம் விநாயகர் சதுரத்திப் பெருவிழா நாளை மறுநாள் செவ்வாயன்று துவங்குகிறது.

இதற்காக கோவிலில் விழா ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. 4ம் தேதி காலையில், மூஷிக படம் ஏந்திய கொடி திருவீதி வலம் வரப்படும். அதைத் தொடரந்து உற்சவர் விநாயகர் சண்டிகேஸ்வரர் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். கொடிப்படம், கொடி மரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டு, 12ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியன்று, அதிகாலையில் கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. மதியம் திருமுக்கூரணி சுவாமிக்கு படையல் படைக்கப்படும். இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதிலுமிருந்து திரளான பக்தர்கள் வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்