ஆப்நகரம்

அத்தி வரதர் 40 ஆண்டுகள் இருக்கப் போகும் குளத்தில் என்ன எல்லாம் இருக்கிறது தெரியுமா?

காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம் முடிந்த பின்னர் வரதரராஜ பெருமாள் திருக்கோயிலின் குளத்தில் வைக்கப்பட உள்ளார். இந்த கோயில் குளத்தின் சிறப்புகள் என்ன என்பதை பார்ப்போம்...

Samayam Tamil 17 Aug 2019, 1:53 pm
அத்தி வரதர் வைபவம் இன்றோடு நிறைவடைகிறது. நாளை மீண்டும் அத்தி வரதர் கோயிலில் உள்ள் ஆனந்த புஷ்கரணியில் வைக்கப்பட உள்ளார்.
Samayam Tamil Athi Varadar Temple Tank 2


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய நிகழ்வாக அத்தி வரதர வைபவம் பார்க்கப்படுகின்றது. அதன் படி 2019ல் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் உள்ள அனந்த புஷ்கரணியில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட, ஆழ்வார்களால் வழிபாடு செய்யப்பட்ட அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டு ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றார்.

வெளியே எடுக்கப்பட்ட அத்தி வரதர் ஆகம விதிப்படி 48 நாட்கள் வெளியே பக்தர்களுக்கு அருள ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை வெளியே வைக்கப்படும் அத்தி வரதர், 17ம் தேதி மீண்டும் கோயில் குளத்தில் வைக்கப்பட உள்ளார்.

அத்தி வரதர் வெளியே வந்த போது எப்படி இருந்தார்?
வலிமை வாய்ந்த மரமான அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரதர் சிலை சேதமடையாமல் இருப்பதற்காக சிலவித எண்ணெய்களால் தேய்க்கப்பட்டு மேலும் உறுதியாக்கப்பட்டுள்ளார்.
இதனால் 40 வருடங்கள் தண்ணீரில் இருந்தாலும், வரதர் எந்த சேதமும் அடையாமல் அதே புன்னகையுடன் காட்சி அளிக்கின்றார்.

அத்தி வரதர் 2019 வைபவத்தின் முழு விரபம்

1939, 1979ம் ஆண்டுக்கு பின்னர் 2019ல் எடுக்கப்பட்டார். அப்போது அத்தி வரதரை சுற்றி பல நாக சிலைகள் சூழவைக்கப்பட்டிருந்ததாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
அதே போல் வரதரின் தலை பகுதியில் ஆதிசேஷன் சிலையும் இருப்பதாக தெரிவித்தனர்.



அத்தி வரதர் 40 ஆண்டுகள் இருக்கப்போகும் இடம்:
2019 அத்தி வரதர் வைபவம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 நடக்கிறது. 17ம் தேதி மீண்டும் கோயில் புஷ்கரணியில் வைக்கப்பட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.

அத்தி வரதர் -ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் புராண வரலாறு

அத்தி வரதரை ஆகஸ்ட் 16 வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும், அன்று எந்த விவிஐபி, விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், பொதுமக்கள் மட்டும் பொது தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், 17ம் தேதி ஆகம விதிப்படி சைல சடங்குகள் நடத்தப்படும் என்றும், அன்றும் எந்த விவிஐபி, விஐபி, பொதுமக்கள் என யாரும் தரிசனம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்திவரதரைப் போல் அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்திபவள வண்ணப் பெருமாள்!- கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள்


குளத்தின் சிறப்பு:
அத்தி வரதர் சிலை வைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் குளம் இதுவரை வற்றியது இல்லை என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கினறனர். சில கோயில்களில் கோடை காலத்தின் போது வெப்பத்தால் குளம் வற்றுவது வழக்கமாக இருந்தாலும் இங்கு குளம் எப்போதும் தண்ணீரால் நிரம்பியே காணப்படுகின்றது.

அத்தி வரதர் குளத்தில் சேதமடையாமல் இருக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் எப்படி செய்யப்படுகிறது?... விளக்கும் வரதராஜ பெருமாள் கோவில் பட்டர்

அத்திவரதர் வைபவத்தை உலகிற்கு எடுத்து சென்று அலங்கரிக்க வைத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளோடு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என ஒட்டு மொத்தமாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்