ஆப்நகரம்

அத்தி வரதர் கையில் எழுதப்பட்டிருக்கும் ‘ மாசுச ’ என்ற வார்த்தையின் பொருள் தெரியுமா?

லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி அளித்து வரும் அத்தி வரதரின் கையில் எழுதப்பட்டுள்ள மாசுச என்ற வார்த்தை பொருள் என்ன என்பது இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 1 Aug 2019, 6:09 pm
தமிழகத்தில் பல்வேறு அரசியல் மற்றும் கால மாற்றங்கள் மிக வேகமாக நடந்து வருகின்றது. பல்வேறு இடங்களில் நாத்திகம் அதிகமாக பேசப்பட்டும் வருகின்றது.
Samayam Tamil Athi Varadar idol


இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் குளத்திலிருந்து எழுந்தருளியுள்ள அத்தி வரதரை தரிசனம் செய்து ஆசி பெற தமிழகம் முழுவம் பல்வேறு இடங்களிலிருந்தும், இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஜூலை 1ம் தேதி முதல் 31 வரை சயன கோலத்தில் காட்சி அத்தி வரதர், இன்று (ஆகஸ்ட் 1ம் தேதி) முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.

நீல நிற பட்டு உடுத்தி, எழுந்து நின்று காட்சியளிக்கும் அத்தி வரதர்- காஞ்சியில் திருவிழாக் கோலம்!


அத்தி வரதர் கையில் "மாசுச" :
இன்று நின்ற கோலத்தில் இருக்கும் அத்தி வரதரின் வலது கை அபய முத்திரை காட்டி நிற்கிறார்.
அவரின் கையில், ‘ மாசுசா: ’ என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கின்றது. மாசுச என்றால் என்ன அதன் பொருள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

தென்காசி கோபுரவாசல் காற்று பக்தர்களை உள் இழுக்கும் அதிசயம்... அறிவியல் உண்மை இதோ!


மாசுசா விளக்கம்:
திருக்கோட்டியூர் நம்பிகள் சரம ஸ்லோகப் பொருளை இராமானுஜருக்கு உபதேசித்தார். சரம ஸ்லோகம் என்பது பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தில் உள்ள 66வது ஸ்லோகம்.

“ சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாப்பேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச

அத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்?- டிக்கெட் முன்பதிவு விபரம்

பொழிப்புரை:
எல்லா தர்மங்களையும் அறவே விட்டு, என்னை மட்டும் சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிப்பேன் வருந்தாதே என கீதையில் கண்ணன் சொல்லியிருக்கிறார்.

அத்தி வரதர் பல லட்சம் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில். சயன கோலத்தின் போது இல்லாத ‘மாசுச’ என்ற வார்த்தை நின்ற நிலையில் அபய முத்திரையை பக்தர்களுக்கு காட்டி, ‘மாசுச’ என்ற வார்த்தையுடன் என்னை சரணடை என சொல்லும் விதமாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்