ஆப்நகரம்

இந்துக்கள் கோயிலில் மொட்டை அடிப்பது ஏன் தெரியுமா? - அறிவியலும் ஆன்மிகமும்

தலைமுடி என்பது மனிதனுக்கு அழகை தாண்டி பெருமையான விஷயமாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அத்தகையை தலைமுடியை கடவுளுக்காக மொட்டை அடித்துக் கொள்ளும் வழக்கம் இந்துக்களுக்கு உண்டு.

Samayam Tamil 18 Jun 2019, 4:31 pm

தலைமுடி என்பது மனிதனுக்கு அழகை தாண்டி பெருமையான விஷயமாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அத்தகையை தலைமுடியை கடவுளுக்காக மொட்டை அடித்துக் கொள்ளும் வழக்கம் இந்துக்களுக்கு உண்டு.
Samayam Tamil Shave head in Temple


இந்து மதத்தில் எண்ணற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதில் தலை முடியை கடவுளுக்கு காணிக்கையாக வழங்கும் சடங்கும் ஒன்று.

திருப்பதி, பழனி, வாரணாசி உள்ளிட்ட பல கோயில்களில் மொட்டை அடிக்கும் சடங்கு அதிகமாக பின்பற்றப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பூரண பலன் கிடைக்கும்!

மறுபிறவையை அறுக்கும்:
பிறப்பு மற்றும் மறுபிறவி மீது அதிக நம்பிக்கை கொண்ட இந்து மதத்தினர் மொட்டை அடிப்பதன் மூலம் மறுபிறவியை தடுக்க முடியும் எனவும் நம்புகின்றனர். அதன் காரணமாக கடவுளுக்கு தன் தலைமுடியை காணிக்கையாக வழங்கி தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு மொட்டையடிக்கப்படுகிறது.

அதோடு தலைமுடி பெருமை என்பதை தாண்டி ஆணவமாக பார்க்கப்படுகின்றது. அதனால் தலைமுடியை கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்து கடவுளை சரணாகதி அடையும் வழியாக இதை பார்க்கப்படுகிறது.

பழநி மலை முருகன் நவபாஷண சிலை அதிசய தகவல்கள் - கோயிலின் சிறப்பம்சங்கள்


அறிவியல் காரணங்கள்
ஆன்மிகத்தை தாண்டி, தலையில் மொட்டை அடிக்கப்படுவதால் மீண்டும் முடிகள் ஆரோக்கியமாக வளரும் வாய்ப்பு உள்ளது. தலையில் இருக்கும் அழுக்கு, கிருமிகள் அகலும். இதனால் தலை முடி உதிர்வு பிரச்னை சரியாகும். குழந்தைக்கு முதல் மொட்டை ஒரு வருடத்திற்குள் போடுவதால், தலை முடி பின்னிக்கொள்வது தடுக்கப்படுகிறது.

பிரமிக்க வைக்கும் அதிசயத்துடன் இருக்கும் திருப்பதி பெருமாளின் சிலை!

புதிதாக முடி வளர்வதற்கான ஆரோக்கிய சூழல் ஏற்படுகிறது.

இதனால் திருப்பதி, பழனி உள்ளிட்ட பெரிய கோயில்களில் மொட்டை அடிக்கப்பட்டு வருகின்றது. அதில் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கிலும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்