ஆப்நகரம்

நடைப்பயிலும் குழந்தைகள் கீழே விழுந்தால் ஏன் அடிபடுவதில்லை: பக்தி கதைகள்

பிரகலாதன் வாங்கிய வரம் காரணத்தால் தான் குழந்தைகள் புதிதாக நடைப்பழகும் போது கீழே விழும் போது அடிபடுவதில்லை. அது என்ன வரம், எப்படி வாங்கினார் தெரியுமா?

Samayam Tamil 21 Jun 2019, 3:01 pm

திருவோண விரதத்தை எப்படி மேற்கொள்வது? என்ன பலன் கிடைக்கும்?

பொதுவாக குழந்தைகள் மிகவும் துறு துறுவென இருப்பது வழக்கம். அவர் தவழும் போதும் சரி, அவர்கள் நடக்கப் பழகும் போதும் சரி தன் முயற்சியை வெற்றியாக்க வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சி செய்வதில் குழந்தைகளின் இயல்பான குணம்.
Samayam Tamil Baby Walking


அப்படிப்பட்ட குழந்தைகள் நடைப்பழகும் போது கீழே விழுந்தால் அடிபடுவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இது எப்படி என பலரும் வியப்பான விஷயமாக இருக்கின்றதல்லவா?

ரஜினி விரும்பி செல்லும் ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள்

பிரகலாதனின் வரம்:
அரக்கனான இரண்யஹசிபு தன்னையே கடவுளாக பிரகணப்படுத்திக் கொண்டு, தன்னை வணங்க வேண்டும் என அனைவருக்கும் கட்டளை இட்டான். ஆனால் அவரது மகன் பிரகலாதனோ 8 எழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணா’ என தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருந்தார்.


பல முறை எச்சரித்தும் இரண்யஹசிபுவின் கட்டளையை கேட்காததால் பிரகலாதனை மகன் என்றும் பார்க்காமல் மலையிலிருந்து கீழே தள்ளிவிட கட்டளையிட்டான். அப்போதும் ‘ஓம் நமோ நாராயணா’ என தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருந்தார்.
மலையிலிருந்து உருண்ட பிரகலாதனை பூமாதேவி காத்ததோடு, நீ விரும்பும் வரத்தை கேள் என பிரகலாதனிடம் கேட்டார்.

சேலத்தில் உருவாகிறது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை! - மலேசியா போட்டியாக களமிறங்கிய தமிழகம்


அப்போது, “தாயே என்னை எப்படி கீழே விழும் போது அடிபடாமல் காத்து ரச்சித்தாயோ, அதே போல் என்னைப் போன்ற குழந்தைகள் நடைப்பயிலும் போது கீழே தவறி விழும் போதும் காக்க வேண்டும், தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.” என வரம் கேட்டார்.

பூமா தேவியும் அந்த வரம் கொடுத்ததால் குழந்தைகளுக்கு கீழே விழும் போது அடிபடுவதில்லை என பக்தி கதைகள் கூறுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்