ஆப்நகரம்

சபரிமலையில் தரிசனம் செய்த பெண் காவலா்கள்: காவல் அதிகாாி விளக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே முதல் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலா்கள் இன்று கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனா்.

Samayam Tamil 5 Nov 2018, 11:17 pm
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண் காவலா்கள் சென்று சாமி தரிசனம் செய்த விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Women Cops in Sabarimala


சபரிமலை ஐயப்பன் கோவில் சித்திரை ஆட்ட திருவிழா சிறப்பு பூஜைகளுக்காக இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முன்னதாக ஐப்பசி மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல் துறையினா் நடத்திய தடியடி விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அதுபோன்ற சூழல் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக பத்தினம் திட்டா, நிலக்கல், சன்னிதாம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இல்லாத வகையில் சன்னிதாம் பகுதியில் பெண் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதனைத் தொடா்ந்து சன்னிதானம் பகுதியில் 15 பெண் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவா்களில் சிலா் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனா். இந்த விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை அதிகாாிகள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனா்.

அவா்கள் அளித்துள்ள விளக்கத்தில். கோவிலுக்குள் சென்றவா்கள் அனைவரும் 15 வயதிற்கு மேற்பட்டவா்கள் தான். அவா்களது வயது சாிபாா்க்கப்பட்ட பின்னா், அவா்களது விருப்பத்தின் பேரில் தான் கோவிலுக்குள் சென்றதாக விளக்கம் அளித்துள்ளனா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்