ஆப்நகரம்

சேலத்தில் உருவாகிறது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை! - மலேசியா போட்டியாக களமிறங்கிய தமிழகம்

மலேசியா பத்துமலை முருகனுக்கு போட்டியாக, சேலம் வாழப்பாடி அருகே 145 அடியில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி வேகமாக நடைப்பெற்று வருகின்றது.

Samayam Tamil 20 Jun 2019, 12:21 pm

சேலம் வாழப்பாடி அருகே 145 அடியில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி வேகமாக நடைப்பெற்று வருகின்றது.
Samayam Tamil Murugan Statue


மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ளது பத்துமலை குகை கோயில். இதன் நுழைவு வாயிலில் உலகிலேயே உயர்மான, அதாவது மொத்தம் (பீடத்துடன் சேர்த்து) 140 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வாழப்பாடியில் முருகன் சிலை:
இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பத்துமலை முருகனை விட உயரமாக அதாவது 145 உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.

பழநி மலை முருகன் நவபாஷண சிலை அதிசய தகவல்கள் - கோயிலின் சிறப்பம்சங்கள்



முருகன் சிலை மட்டும் 126 அடி உயரம் + 19 அடி உயர பீடம் என 145 அடி உயரத்துடன் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த உயரமான சிலை அடுத்தாண்டு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பூரண பலன் கிடைக்கும்!

இந்த சிலையை, மலேசியா, பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி தலைமையில் வடிவமைக்கப்பட்டு வருகிகின்றது.


சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இந்த சிலை அமைக்கப்பட்டு வருவதால், அதன் பிரமாண்டத்தைப் பார்க்க இப்பொழுதே பக்தர்களும், பயணிகளூம் இங்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

பன்னிரண்டு கைகள் மூலம் முருகப்பெருமான் செய்யும் வேலை என்ன தெரியுமா?

சுற்றுலா தலமாகும்:
இந்த பிரமாண்டமான முருகன் சிலை உருவாக்கப்பட்டால், இந்த பகுதி பெரிய சுற்றுலாத் தலமாக வாய்ப்புள்ளது. இந்த பகுதி மிகவும் பிரபலமாகவும், பொருளாதார வளர்ச்சியும் பெறும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.


இங்கு பாஜக.,வின் முக்கிய தலைவரான இல. கணேசன் சிறப்பு பூஜை செய்து பேட்டியும் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்