சொந்த வீடு கட்டுவது என்பது தான் பெரும்பாலும் எல்லோருடைய கனவாக இருக்கும். சிலர் கடனை வாங்கியாவது வீடு கட்டிவிடுவார்கள். சிலர் வீடு கட்ட எப்படி சிறுசிறுகச் சேர்த்தாலும் கையில் பணம் தங்காது. சிலரோ நிறைய பணம் வைத்திருந்தும் சிலருக்கு வீடு கட்டும் யோகமே கைகூடி வராது. இப்படி சொந்தமாக ஒரு வீடு கட்டுவதில் எவ்வளவு தடைகள். இந்த தடைகளெல்லாம் நீங்க வேண்டுமென்றால், இந்த ஆஞ்சநேயரை இப்படி சென்று வழிபடுங்கள். உங்களுக்கு வீடு கட்டும் யோகம் கைகூடும்.
எந்த கோவில்?
சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கின்ற வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லுகின்ற வழியில் கிட்டதட்ட 12 கி.மீ தூரத்தில் குடிகொண்டிருப்பவர் தான் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர்.
108 திவ்விய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை ஆதிவராகப் பெருமாளான நித்திய கல்யாணப் பெருமாள் கோவிலினுடைய பரிவேட்டைத் தலமாக விளங்குவது தான் இந்த புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில். வேறு எந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. இங்கு வரும் பக்தர்களுக்கு வலம்புரி சங்கில் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது.
செங்கல்லும் கிரிவலமும்
இந்த மலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு அமாவாசை நாட்களில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் குறிப்பாக, அமாவாசை நாளில் ஒரு செங்கல்லில் ராமரின் பெயரை எழுதி அதைத் தலையில் வைத்துக் கொண்டு, கிரிவலம் சென்றால் மிக வேகமாக வீடு கட்டும் யோகம் உண்டாகும். இப்படி செய்பவர்கள் கட்டாயம் புதிதாக வீடு வாஙகுவார்களாம்.
பௌர்ணமி கிரிவலம்
அதேபோல ஒவ்வொரு பௌர்ணமியும் இரவில் இந்த கஜகிரி மலையை ஆஞ்சநேயரை சுற்றி வருகிறார் என அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர். அந்த சமயத்தில் பக்தர்களும் இந்த மலையைச் சுற்றி வந்தால், நினைத்தது நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
திருமணத் தடை உள்ளவர்கள்
ஒவ்வொரு மாதமும் மூல நட்சத்திர நாளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்தி வழிபட்டு வந்தால் தடைபட்டு வந்த திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் கைகூடி வரும்.
பதவி உயர்வு
ஆஞ்சநேயருக்கு செவ்வாய்க் கிழமைகளில் வெண்ணையும் வெற்றிலை மாலையும் அணிவித்தால் நீங்கள் நினைத்தபடி வேலையும் பதவி உயர்வு கிடைக்கும்.
எந்த கோவில்?
சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கின்ற வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லுகின்ற வழியில் கிட்டதட்ட 12 கி.மீ தூரத்தில் குடிகொண்டிருப்பவர் தான் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர்.
108 திவ்விய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை ஆதிவராகப் பெருமாளான நித்திய கல்யாணப் பெருமாள் கோவிலினுடைய பரிவேட்டைத் தலமாக விளங்குவது தான் இந்த புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில். வேறு எந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. இங்கு வரும் பக்தர்களுக்கு வலம்புரி சங்கில் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது.
செங்கல்லும் கிரிவலமும்
இந்த மலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு அமாவாசை நாட்களில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் குறிப்பாக, அமாவாசை நாளில் ஒரு செங்கல்லில் ராமரின் பெயரை எழுதி அதைத் தலையில் வைத்துக் கொண்டு, கிரிவலம் சென்றால் மிக வேகமாக வீடு கட்டும் யோகம் உண்டாகும். இப்படி செய்பவர்கள் கட்டாயம் புதிதாக வீடு வாஙகுவார்களாம்.
பௌர்ணமி கிரிவலம்
அதேபோல ஒவ்வொரு பௌர்ணமியும் இரவில் இந்த கஜகிரி மலையை ஆஞ்சநேயரை சுற்றி வருகிறார் என அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர். அந்த சமயத்தில் பக்தர்களும் இந்த மலையைச் சுற்றி வந்தால், நினைத்தது நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
திருமணத் தடை உள்ளவர்கள்
ஒவ்வொரு மாதமும் மூல நட்சத்திர நாளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்தி வழிபட்டு வந்தால் தடைபட்டு வந்த திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் கைகூடி வரும்.
பதவி உயர்வு
ஆஞ்சநேயருக்கு செவ்வாய்க் கிழமைகளில் வெண்ணையும் வெற்றிலை மாலையும் அணிவித்தால் நீங்கள் நினைத்தபடி வேலையும் பதவி உயர்வு கிடைக்கும்.