ஆப்நகரம்

திக்குறிச்சி மகாதேவர் ஆலயத்தில் நந்தி வாகன கும்பாபிஷேகம்..!

கன்னியாகுமரியில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் ஆலயத்தில் நந்தி வாகனம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

TNN 4 Jun 2017, 9:09 pm
கன்னியாகுமரியில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் ஆலயத்தில் நந்தி வாகனம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Samayam Tamil thikkurichi mahadevar temple kumbabishekam
திக்குறிச்சி மகாதேவர் ஆலயத்தில் நந்தி வாகன கும்பாபிஷேகம்..!


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பிரசித்தி பெற்ற திக்குறிச்சி மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. புகழ் பெற்ற சிவாலய ஓட்ட நிகழ்வில், இரண்டாவது கோவிலாக இந்த கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த கோவில் கட்டப்பட்டிருந்தாலும், கொடி மரம் இல்லாமல் இந்த ஆலயம் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு திக்குறிச்சி கோவிலில் கொடி மரத்தை பிரதிஷ்டை செய்ய கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது.



அதன்படி கொடி மரம் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்வு கடந்த 1-ஆம் தேதி துவங்கியது. விழாவின் நான்காம் நாளாக இன்று, நந்தி வாகனம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதிய கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு,மகாதேவரை வழிபட்டனர். கோவில் கும்பாபிஷேக நிகழ்வு, வரும் ஜுன் ஆறாம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.



Thikkurichi Mahadevar Temple kumbabishekam

அடுத்த செய்தி

டிரெண்டிங்