ஆப்நகரம்

திருக்கழுக்குன்றத்தில் இன்று திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்து உள்ளது திருக்கழுக்குன்றம். இங்கே பிரசித்தி பெற்ற ஸ்ரீஅபிராமி நாயகி சமேத ஸ்ரீருத்ர கோட்டீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண மகோற்ஸவப் பெருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.

TOI Contributor 18 Jun 2016, 5:45 pm
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்து உள்ளது திருக்கழுக்குன்றம். இங்கே பிரசித்தி பெற்ற ஸ்ரீஅபிராமி நாயகி சமேத ஸ்ரீருத்ர கோட்டீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண மகோற்ஸவப் பெருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
Samayam Tamil thirukalyanam in thirukalukundram
திருக்கழுக்குன்றத்தில் இன்று திருக்கல்யாணம்


திருக்கழுக்குன்றம் உத்திராங்கோயில், ஸ்ரீருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் ருத்ரகோட்டீஸ்வர பெருமானுக்கும், அபிராமி அன்னைக்கும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெறுகிறது.

இதையொட்டி இன்று காலையில் கருவறையில் குடிகொண்டிருக்கும் மூலவர் ஸ்ரீருத்ரகோட்டீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து உச்சிகால பூஜையின் போது சுயம்பு மூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

அதையடுத்து, உற்ஸவருக்கு மகா அபிஷேகமும், ஆராதனைகளும் விசேஷ அலங்காரங்களும் நடைபெறுகின்றன. பிறகு 32 சீர்வரிசைப் பொருட்கள் மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துவரப்படும். பெண் அழைப்பு நிகழ்ச்சியும் அதையடுத்து திருக்கல்யாண வைபவமும் சிறப்புற நடைபெறும்.

இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்