ஆப்நகரம்

திருமணஞ்சேரியில் கும்பாபிஷேக விழா!

கோயில் நகரம் என்று சொல்ல்லப்படும் கும்பகோணம் குத்தாலம் அருகே உள்ள திருமணஞ்சேரியில் உள்ள திருமணஞ்சேரி எனும் தலத்தில் விமரிசையாக கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

TNN 12 Apr 2016, 4:05 pm
கோயில் நகரம் என்று சொல்ல்லப்படும் கும்பகோணம் குத்தாலம் அருகே உள்ள திருமணஞ்சேரியில் உள்ள திருமணஞ்சேரி எனும் தலத்தில் விமரிசையாக கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. திருமண பரிகாரத் திருத்தலம் இது! எனவே இந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கும்பாபிஷேக வைபவத்தைத் தரிசித்தனர்.
Samayam Tamil thirumanancheri temple fest
திருமணஞ்சேரியில் கும்பாபிஷேக விழா!


திருமணஞ்சேரியில் அமைந்துள்ள இறைவனின் திருநாமம் உத்வாகநாதர். புராணச் சிறப்புகள் கொண்ட இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது. கோபுரத்துக்கும் பொம்மைகளுக்கும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன. சந்நிதிகளும் மண்டபங்களும் சீர்செய்யப்பட்டன.

கடந்த 8ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது கும்பாபிஷேக விழா. தினமும் காலையும் மாலையும் சிறப்பு பூஜைகளும் உத்ஸவத் திருமேனிக்கு விசேஷ அலங்காரங்களும் செய்யப்பட்டன. முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை என காலை மாலை இரண்டு வேளையும் விமரிசையாக ஹோம பூஜைகள் நடந்தன.

இந்த கும்பாபிஷேக விழாவையும் யாகசாலை பூஜைகளையும் மேற்கொள்வதற்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட சிவாச்சார்யர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்களைக் கொண்டு யாக சாலை பூஜைகள் இன்று காலை வரை செவ்வனே நடைபெற்றன.

இதையடுத்து காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் ஆகம விதிகளின் படி சிறப்புற நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை முதலான பல ஊர்களில் இருந்தும் சென்னை முதலான வெளியூர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை தரிசித்தார்கள். இன்று மாலை மண்டலாபிஷேக பூஜைகளும் வழிபாடுகளும் தொடங்குகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்