ஆப்நகரம்

மலைமேல் குமரனுக்குவேல் எடுக்கும் விழா!

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் விழா, வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது.

TOI Contributor 26 Sep 2016, 4:20 pm
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் விழா, வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது.
Samayam Tamil thiruparankuntram vel festival
மலைமேல் குமரனுக்குவேல் எடுக்கும் விழா!



மதுரை திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தில், முருகப் பெருமான் கோயில் கொண்டிருக்கிறார். மலையில்... ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. அத்துடன் மலைமேல் குமரர் சந்நிதியும் அமைந்து உள்ளது. மேலும் வற்றவே வற்றாத சுனை தீர்த்தக் குளமும் உள்ளது சிறப்பு. நக்கீரர் பெருமானுக்காக, முருகப்பெருமானே வந்து, தன் வேல் கொண்டு மலைப் பாறையைக் கீறி, உருவாக்கிய சுனைதீர்த்தம் என்கிறது ஸ்தல புராணம்!


இதை நினைவுபடுத்தும் வகையில், வருடந்தோறும் புரட்டாசி மாதத்தின் ஓரு வெள்ளிக்கிழமையில், கருவறையில் உள்ள முருகப்பெருமான் திருக்கரத்தில் இருந்து தங்கவேல் எடுத்து, மலை உச்சியில் உள்ள சுனைக்கு எடுத்து சென்று மகாஅபிஷேகம் நடைபெறும் நிகழ்ச்சி விமரிசையாக அரங்கேறும்.
இந்த வருடம், மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழாவானது வரும் 30ம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. அன்று மாலையில் அடிவாரத்தில் உள்ள பழநியாண்டவர் சந்நிதியில் இருந்து பூப்பல்லக்கில் வேல் புறப்பட்டு திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியையும் வேலையும் தரிசனம் செய்வார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்